Friday, July 10, 2009
அல்லாஹ்வின் தூதரின் அமுத மொழி! ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர்.
Labels:
ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம்)
ரியா !மறைவான இணைவைப்பு?" அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் " தொடர் 11
Labels:
ரியா
அல்லாஹ்விற்காக அன்றி மற்றவர்களுக்காக செய்யப்படும் செயல்கள் இறைவன் அங்கீகாிக்க மாட்டான் என்று பல அறிவிப்புகளில் அண்ணல் நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.
'அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்" நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ
அல்லாஹ்விற்காக தூய நோக்கமின்றி செய்யப்படும் செயலை அல்லாஹ் எப்படி ஏற்றுக் கொள்வான்? அல்லாஹ் இது போன்ற செயல்கள் குறித்து திருக்குர்ஆனில் எச்சாிக்கிறான்:
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 2:264)
ரியாவில் ஈடுபடுபவர் மண்ணால் மூடப்பட்ட பாறை போன்றவர் ஆவார். மக்கள் அப்பாறையைப் பார்க்கும் போது அது விளைநிலம் போல் தோற்றமளிக்கும். ஆனால் சிறிய மழை பெய்தால் கூட, அது ஒரு பாறை என்பது அம்பலமாகிவிடும். மேலும் ரியாவில் ஈடுபடுவோர் தங்கள் செயலின் பலன்களை அனுபவிக்க இயலாத சூழலும் ஏற்பட்டு விடும்.
பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது: அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன. அதில் அனைத்துக் கனிகளும், அவருக்கு உள்ளன: அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது: அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எாித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:266)
ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயல்களுக்கு தீயினால் எாிக்கப்படும் நல்ல பசுமையான தோட்டத்தை அல்லாஹ் உவமையாகக் கூறுகிறான். இந்த தோட்டம் எாிக்கப்படும் போது, அதன் உாிமையாளர் கையைப் பிசைந்து கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார். இது போன்ற நிலை தான் தனது நற்செயல்களை ரியாவினால் வீணாக்கியவருக்கு ஏற்படும். இறுதி தீர்ப்பு நாளில் ரியாவைக் கடைப்பிடித்தவர்களை அல்லாஹ் சிறுமைப்படுத்துவான். தாங்கள் யாரைக் கவருவதற்காக செயல்களைப் புரிந்தார்களோ அவர்களிடமிருந்தே வெகுமதிகளைப் பெறுமாறு அல்லாஹ் கூறுவான்.
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அறிவிக்கிறார்கள்: (இறுதித்தீர்ப்பு நாளில்) மக்களின் செயல்களைக் கணக்கிடும் போது, (ரியாவைக் கடைப்பிடித்தவர்களிடம்) கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவான், யாாிடம் உங்கள் செயல்களைக் காட்டுவதற்காக செய்தீர்களோ, அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களிடம் ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள். நூல்: சஹீஹ் அல் தா;கீப் வத் தக்ரீப் - எண் : 29
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் தங்களிடம் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும் போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணை வைக்கும் விதத்தில் ஒரு செயலைச் செய்தால், (எனது உதவியின்றி) அவருடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டுவிடுகிறேன். நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா
அல்லாஹ்வின் தூதா; அவர்கள் சொன்னதாக உபை இப்னு காப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'இந்த மார்க்கத்தின் மூலமாக சிரமமின்மையும், கண்ணியமும், கவுரவமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியும், பூமியிலிருந்து வலிமையும் உண்டு என்று இந்த சமுதாயத்திற்கு நன்மாராயம் கூறுவீராக. எனவே, இந்த உலகத்தை மனதிற்கொண்டு ஒருவர் மறுமைக்குாிய செயலைச் செய்தால், அதன் பலனின் எந்த ஒரு பாகத்தையும் அவர் மறுமையில் அடைய மாட்டார். நூல்: சஹீஹ் தா;கீப் வல் தா;ஹீஹ்
அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.
'அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்" நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ
அல்லாஹ்விற்காக தூய நோக்கமின்றி செய்யப்படும் செயலை அல்லாஹ் எப்படி ஏற்றுக் கொள்வான்? அல்லாஹ் இது போன்ற செயல்கள் குறித்து திருக்குர்ஆனில் எச்சாிக்கிறான்:
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 2:264)
ரியாவில் ஈடுபடுபவர் மண்ணால் மூடப்பட்ட பாறை போன்றவர் ஆவார். மக்கள் அப்பாறையைப் பார்க்கும் போது அது விளைநிலம் போல் தோற்றமளிக்கும். ஆனால் சிறிய மழை பெய்தால் கூட, அது ஒரு பாறை என்பது அம்பலமாகிவிடும். மேலும் ரியாவில் ஈடுபடுவோர் தங்கள் செயலின் பலன்களை அனுபவிக்க இயலாத சூழலும் ஏற்பட்டு விடும்.
பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது: அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன. அதில் அனைத்துக் கனிகளும், அவருக்கு உள்ளன: அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது: அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எாித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:266)
ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயல்களுக்கு தீயினால் எாிக்கப்படும் நல்ல பசுமையான தோட்டத்தை அல்லாஹ் உவமையாகக் கூறுகிறான். இந்த தோட்டம் எாிக்கப்படும் போது, அதன் உாிமையாளர் கையைப் பிசைந்து கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார். இது போன்ற நிலை தான் தனது நற்செயல்களை ரியாவினால் வீணாக்கியவருக்கு ஏற்படும். இறுதி தீர்ப்பு நாளில் ரியாவைக் கடைப்பிடித்தவர்களை அல்லாஹ் சிறுமைப்படுத்துவான். தாங்கள் யாரைக் கவருவதற்காக செயல்களைப் புரிந்தார்களோ அவர்களிடமிருந்தே வெகுமதிகளைப் பெறுமாறு அல்லாஹ் கூறுவான்.
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அறிவிக்கிறார்கள்: (இறுதித்தீர்ப்பு நாளில்) மக்களின் செயல்களைக் கணக்கிடும் போது, (ரியாவைக் கடைப்பிடித்தவர்களிடம்) கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவான், யாாிடம் உங்கள் செயல்களைக் காட்டுவதற்காக செய்தீர்களோ, அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களிடம் ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள். நூல்: சஹீஹ் அல் தா;கீப் வத் தக்ரீப் - எண் : 29
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் தங்களிடம் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும் போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணை வைக்கும் விதத்தில் ஒரு செயலைச் செய்தால், (எனது உதவியின்றி) அவருடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டுவிடுகிறேன். நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா
அல்லாஹ்வின் தூதா; அவர்கள் சொன்னதாக உபை இப்னு காப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'இந்த மார்க்கத்தின் மூலமாக சிரமமின்மையும், கண்ணியமும், கவுரவமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியும், பூமியிலிருந்து வலிமையும் உண்டு என்று இந்த சமுதாயத்திற்கு நன்மாராயம் கூறுவீராக. எனவே, இந்த உலகத்தை மனதிற்கொண்டு ஒருவர் மறுமைக்குாிய செயலைச் செய்தால், அதன் பலனின் எந்த ஒரு பாகத்தையும் அவர் மறுமையில் அடைய மாட்டார். நூல்: சஹீஹ் தா;கீப் வல் தா;ஹீஹ்
Saturday, July 4, 2009
விதவைகளுக்காகவும், வறியவர்களுக்காகவும்........!
Labels:
நபிகள் நாயகம் ஸல்,
ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், விதவைகளுக்காகவும், வறியவர்களுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் போர் புரிபவரைப் போன்றவர். மேலும், அவர் இரவு முழுக்க இறைவனின் சந்நிதியில் நின்று களைப்படையாமல் வணங்கிக் கொண்டிருப்பவரைப் போன்றவர், பகலில் உண்ணாமல் தொடர்ந்து நோன்பு நோற்ற வண்ணமிருக்கும் நோன்பாளி போன்றவர். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்)
Thursday, July 2, 2009
எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது!
ஒரு மாணவன். அவனது தந்தை நல்ல வசதி படைத்தவர். அவனை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அவருக்கு அளவு கடந்த ஆர்வம். நல்லதொரு கல்லூரியில் சேர்த்து விடுகிறார் மகனை. அவனுக்கு என்னடாவென்றால் படிப்பு ஏறவில்லை. முதலாம் ஆண்டில் பல பாடங்களில் தோல்வி. தந்தையிடம் மறைத்து விட்டான். தந்தையோ மகனிடம் மிக அதிக நம்பிக்கை வைத்திருந்தார். பையன் - பாடங்களை சிரமப்பட்டுப் படித்து தேர்வுகளை மீண்டும் எழுதினான். மீண்டும் தோல்வி. என்ன செய்தான் தெரியுமா? தற்கொலை. "எப்படியும் போங்கடா!" என்று விட்டு விட்டார் மற்ற மகன்களின் கல்வி விஷயத்தில்!
ஆனால் இங்கே ஒரு மாணவன். ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்துக்கு மேல் எடுத்திருந்தான். கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் இந்த மதிப்பெண் எடுப்பது கூட பாராட்டுதலுக்கு உரியதே! ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை? தந்தைக்கு உடல் நலம் இல்லை. பாட்டி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
எனது நண்பர். அவர் ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார். ஒரு இறுதி ஆண்டு மாணவன். இருபத்தி மூன்று தேர்வுகளில் தோல்வி. Arrears! ஏன் என்று கேட்டாராம். பையன் சொன்னான்: "சார், எனக்கு இந்தப் படிப்பில் எல்லாம் விருப்பம் இல்லை. என் அப்பா வற்புறுத்தி சேர்த்து விட்டார். எனக்கு விருப்பம் எல்லாம் - Fine Arts - ல் தான்.
அப்பாவும் டாக்டர். அம்மாவும் டாக்டர். விடுவார்களா ஒரே பையனை. டாக்டராக்கியே தீர்வேன் என்று நின்றார்கள். ஆனால் பையனுக்குப் பிடிக்கவில்லையே! சேர்த்தார்கள். என்ன நடந்திருக்கும் என்று ஊகியுங்களேன்.
இன்னொரு - மேல் நிலை இரண்டு - மாணவன். இயற்பியல் பாடத்தில் நூற்று ஐம்பதுக்கு வெறும் எட்டு மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் - பருவத் தேர்வினிலே. பெற்றோர் வரவழைக்கபபட்டனர் பள்ளிக் கூடத்துக்கு. பெற்றோருக்கு முன்னிலையில் மாணவன் சொன்னான்: "நானா எடுக்கச் சொன்னேன் -
இன்னொரு மாணவனைப் பற்றி என் ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். அவன் என்ன முயற்சி செய்து படித்தாலும் என்பது மதிப்பெண்களுக்கு மேல் தாண்ட இயலவில்லை. அப்பா அதிகாலையில் எழுந்து கொண்டு மகனையும் எழுப்பி படிக்கச் சொல்வாராம். ஒரு நாள் மகன் அசதியில் எழ மறுக்க ஒரு குடம் குளிர் நீரை அவன் தலையில் கொட்டினாராம். பிறகு என்ன நடந்திருக்கும்?
பாடம் கற்றுக் கொள்வோமா?
1. ஏழை மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எங்கெங்கோ சிக்கிக் கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்குள் என்னென்ன வளங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை யார் அறிவார்? இது தான் பெரும்பாலான ஏழை மாணவர்களின் நிலை!
2. வசதியுள்ள மாணவர்களின் விஷயத்தில் - அவர்களின் மனித வளங்கள் என்ன, அவர்களுக்கு ஆர்வம் எதிலே - என்பனவெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே - அவர்களை டாக்டர் ஆக்குகிறேன், இஞ்சினியர் ஆக்குகிறேன் என்று பெற்றோர் முடிவெடுப்பது மிகவும் தவறு. ஆனால் இது தான் பெரும்பாலான வசதியுள்ள மாணவர்களின் நிலை.
3. ஆனால் - இரண்டு விதமான மாணவர்களின் விஷயத்திலும் ஒரே ஒரு ஒற்றுமை. அவர்கள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது!
S.A.MANSOOR ALI,NEEDUR.
ஆனால் இங்கே ஒரு மாணவன். ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்துக்கு மேல் எடுத்திருந்தான். கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் இந்த மதிப்பெண் எடுப்பது கூட பாராட்டுதலுக்கு உரியதே! ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை? தந்தைக்கு உடல் நலம் இல்லை. பாட்டி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
எனது நண்பர். அவர் ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார். ஒரு இறுதி ஆண்டு மாணவன். இருபத்தி மூன்று தேர்வுகளில் தோல்வி. Arrears! ஏன் என்று கேட்டாராம். பையன் சொன்னான்: "சார், எனக்கு இந்தப் படிப்பில் எல்லாம் விருப்பம் இல்லை. என் அப்பா வற்புறுத்தி சேர்த்து விட்டார். எனக்கு விருப்பம் எல்லாம் - Fine Arts - ல் தான்.
அப்பாவும் டாக்டர். அம்மாவும் டாக்டர். விடுவார்களா ஒரே பையனை. டாக்டராக்கியே தீர்வேன் என்று நின்றார்கள். ஆனால் பையனுக்குப் பிடிக்கவில்லையே! சேர்த்தார்கள். என்ன நடந்திருக்கும் என்று ஊகியுங்களேன்.
இன்னொரு - மேல் நிலை இரண்டு - மாணவன். இயற்பியல் பாடத்தில் நூற்று ஐம்பதுக்கு வெறும் எட்டு மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் - பருவத் தேர்வினிலே. பெற்றோர் வரவழைக்கபபட்டனர் பள்ளிக் கூடத்துக்கு. பெற்றோருக்கு முன்னிலையில் மாணவன் சொன்னான்: "நானா எடுக்கச் சொன்னேன் -
இன்னொரு மாணவனைப் பற்றி என் ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். அவன் என்ன முயற்சி செய்து படித்தாலும் என்பது மதிப்பெண்களுக்கு மேல் தாண்ட இயலவில்லை. அப்பா அதிகாலையில் எழுந்து கொண்டு மகனையும் எழுப்பி படிக்கச் சொல்வாராம். ஒரு நாள் மகன் அசதியில் எழ மறுக்க ஒரு குடம் குளிர் நீரை அவன் தலையில் கொட்டினாராம். பிறகு என்ன நடந்திருக்கும்?
பாடம் கற்றுக் கொள்வோமா?
1. ஏழை மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எங்கெங்கோ சிக்கிக் கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்குள் என்னென்ன வளங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை யார் அறிவார்? இது தான் பெரும்பாலான ஏழை மாணவர்களின் நிலை!
2. வசதியுள்ள மாணவர்களின் விஷயத்தில் - அவர்களின் மனித வளங்கள் என்ன, அவர்களுக்கு ஆர்வம் எதிலே - என்பனவெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே - அவர்களை டாக்டர் ஆக்குகிறேன், இஞ்சினியர் ஆக்குகிறேன் என்று பெற்றோர் முடிவெடுப்பது மிகவும் தவறு. ஆனால் இது தான் பெரும்பாலான வசதியுள்ள மாணவர்களின் நிலை.
3. ஆனால் - இரண்டு விதமான மாணவர்களின் விஷயத்திலும் ஒரே ஒரு ஒற்றுமை. அவர்கள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது!
S.A.MANSOOR ALI,NEEDUR.
Wednesday, July 1, 2009
அண்ணல் நபி அவர்களின் அமுத மொழி! நாம் ஒரு கண்ணாடி!!
Labels:
அண்ணல் நபிகள்,
இஸ்லாம்,
ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளன் மற்றோர் இறை நம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான். ஓர் இறை நம்பிக்கையாளன் மற்றோர் இறை நம்பிக்கையாளின் சகோதரன் ஆவான். அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான், அவனுக்குப் பின்னாலிருந்து அவனைப் பாதுகாக்கின்றான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)
Monday, June 29, 2009
இரத்த உறவுகளை துண்டிக்காதீர்கள்!
Labels:
குர்ஆன்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
Wednesday, June 24, 2009
பீஸ் டீவி (Peace TV)யின் இலவச உருது மொழிச் சேவை தொடக்கம்
Labels:
peace tv

மனிதகுல அமைதிக்கு இஸ்லாம் கூறும் இணக்கமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 1.1.2006 முதல் பீஸ் டீவி (Peace TV)யில் 24 மணிநேர ஆங்கில ஒளிபரப்புச் சேவை தொடங்கப் பட்டது.
கடந்த மூன்றாண்டு காலம் தன் குறிக்கோளை இலக்காகக் கொண்டு இயங்கிய பீஸ் டீவி (Peace TV)யின் ஆங்கில ஒளிபரப்புச் சேவைக்கு உலகெங்கும் வாழும் முஸ்லிம்களும் பிறமதச் சகோதரர்களும் வழங்கிய அமோக ஆதரவுவைத் தொடர்ந்து, பீஸ் டீவி உர்து (PEACE TV URDU) எனும் தனது புதுச் சேவையைக் கடந்த 1.6.2009இல் சோதனை ஒளிபரப்பு மூலம் பீஸ் டீவி (Peace TV) தொடங்கியது.
உருது ஒளிபரப்பின் சோதனை ஓட்டமும் பெருவரவேற்பைப் பெற்றதால், கடந்த 19.6.2009 முதல் முழுமையான 24 மணி நேரச் சேவையாக பீஸ் டீவி உர்து (PEACE TV URDU) செயல்படத் தொடங்கி விட்டது, அல்ஹம்து லில்லாஹ்!
பிற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் பல்வேறு மூடநம்பிக்கைக் கற்பனைக் கதைகள், நாடகங்கள், வன்முறைகள், ஆடல்-பாடல் ஆபாசங்கள் போன்ற நிகழ்சிகளில் சிக்கியிருந்த மக்களுக்கு "மனித குல அமைதிக்குத் தீர்வு" எனும் தலைப்போடு ஒளிபரப்பப்படும் தூய்மையான இந்நிகழ்சிகள் ஒரு சிறந்த மாற்று வழியாகவும் அறிவொளியாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
கடந்த வாரம்வரை உர்து நிகழ்சிகள் PEACE TVயின் ஆங்கில நிகழ்சிகளுடன் ஒளி பரப்பப்பட்டன. அந்த ஒளிபரப்பில் 66% முதல் 75% ஆங்கில நிகழ்சிகளும் 25% முதல் 33% வரை உர்து நிகழ்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இனி இரண்டு அலைவரிசைகளும் 100% ஆங்கிலம் மற்றும் உர்து நிகழ்சிகளை ஒளிபரப்பக் கூடிய, இரண்டு 24 மணி நேர அலைவரிசைகளாக இயங்கும்.
மிகவும் வித்தியாசமான முறையில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்சிகள் டாக்டர் ஜாகீர் நாயக், அஹ்மத் தீதாத், பிலால் பிலிப்ஸ், அப்துல் ரஹீம் கிரீன், யூசூஃப் எஸ்டேஸ், யாஸர் ஃபஜாகா, டாக்டர் ஜமால் அல்-பதவீ போன்ற பல உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், பத்திரிகையாளர்கள் கேள்வி-பதில் நிகழ்சிகள், ஆகிய ஆன்மீக, உலகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் அமைதியான முறையில் தீர்வுகள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கபடுகின்றன என்பது குறிப்பாக இளம் அறிவு ஜீவிகளை கவர்கின்றது.
அதே போல் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பீஸ் மாநாட்டு நிகழ்சிகள், மும்பை இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் (IRF ISLAMIC RESEARCH FOUNDATION) [ஐ ஆர் எஃப்]அரங்க நிகழ்சிகள், கேள்வி-பதில்கள், டாக்டர் வில்லியம் கேம்ப் பெல், டாக்டர் ருக்னுத்தீன், குரு ரவி ஷங்கர், போன்றவர்களுடன் நடைபெற்ற மத ஒப்பாய்வு விவாதங்கள் மிகவும் பிரபலமானவை.
மேலும் பொருளாதார, விஞ்ஞான, கல்வி போன்ற இதர வாழ்வியல் துறையின் புகழ்பெற்ற நிபுணர்கள் நேர்காணல்கள், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மும்பையில் நடத்தும் ISLAMIC INTERNATIONAL SCHOOL சிறுவர்கள், மாணவர்கள் நிகழ்சிகள் என்று எல்லா வர்க்கத்தினரையும் கவரும் சேனலாக இது செயல்படுகிறது.
முற்றிலும் இலவசமான இந்த ஒளிபரப்பு அலைவரிசைகளை உங்கள் கேபிள் ஆபரேட்டர்களைத் தொடர்பு கொண்டு நிறுவிக் கொள்வதன் மூலம் ஆங்கிலம் மற்றும் உர்து (ஹிந்தி) இரு மொழிகளில் 24 மணி நேரமும் உங்கள் இல்லத்தில் இறை மார்க்கம் இஸ்லாமிய மணம் கமழச் செய்வீர்களாக.
அல்லாஹ்வின் அருளும் கிருபையும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இவ்வழியில் உழைத்து நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றி நோக்கத்தில் செயல்படும் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக!ஒளிபரப்பு அலை வரிசைகள்:
----------------------------------------
1) INTELSAT 10 ( PAS 10)
Position : 68.5 East Frequency : 4116 Symbol rate : 8145, FEC 3/4
Polarization Vertical.
Reach : Asia, Middle East, Australia & Africa.
2) ARAB SAT : BADR - 4
Position : 26.0 East Frequency : 12169 Symbol rate : 27500, FEC 3/4
Polarization vertical.
Reach : Middle East, Africa & Europe.
Saturday, June 20, 2009
உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்!
Labels:
சமூக விரோதி,
புகை,
வீண் விரயம்

நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் இருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் þருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு 'சமூக விரோதி' புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.
இறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?
இஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.
நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:195)
உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)
மேலே கண்ட þறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?
மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.by அப்துஸ்ஸமது சென்னை
Subscribe to:
Posts (Atom)