Wednesday, April 16, 2014

ஒருமுறை என்னை மன்னித்து விடுங்கள், இனி பாஜகவுடன் சேர மாட்டேன்,ஜெயலலிதா கெஞ்சினார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தேர்தல் ஆதரவு நிலைப்பாடு சுயநலனா ?. சமுதாய நலனா ?.

சிதம்பரம்,திருவள்ளூர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி,
தென்காசி - புதிய தமிழகம் கட்சி
,
மயிலாடுதுறை, தேனி,கன்னியாகுமரி - காங்கிரஸ் கட்சி
மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.


ஏன் இந்த மாற்றம் ?. இந்த மாற்றததிற்கு காரணம் சுயநலனா ?. சமுதாய நலனா ?.

---சுயநலன் என்றால் ?.

ஜெயலிலதாவுக்கு ஆதரவு என்றதும் எழுந்த எதிர்ப்பலைகளின் போதே மாற்றி இருக்க முடியும் !. எந்தளவுக்கு எதிர்ப்பு கிளம்பியது என்றால், முதுபெரும் மார்க்க அறிஞரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்தலைவருமாகிய சகோதரர் பீஜே அவர்களை ஜெயலலிதாவின் காலில் விழுவதைப் போல் சில கயவர்கள் க்ராஃபிக்ஸ் செய்து இணையத்தில் வெளியிட்டனர்.

மாநிலத் தலைவர் மட்டுமல்லாமல் நிர்வாகிகள் முதற்கொண்டு உறுப்பினர்கள் வரை கடும் சொற்களால் காயப்படுத்தப்பட்டனர். கடும் மனஉலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

இதற்கெல்லாம் சொல்லப்பட்ட ஒரே காரணம் சமுதாய காவலர் கலைஞரை விட்டு மோடியின் சகோதரி ஜெயலலிதாவிடம் போகலாமா என்பது தான்.

அர்த்தமற்ற இந்த காரணத்துக்காக, வரலாறு தெரியாதவர்களின் புலம்பலுக்காக அவற்றை அனைவரும் சகித்துக்கொண்டனர். சகித்துக்கொண்டால் சமுதாயத்திற்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் என்பதை கருத்தில் கொண்டே சகித்துக்கொள்ளப்பட்டது. அதனால் அப்பொழுது அதிமுகவுக்கான ஆதரவு எனும் நிலைப்பாட்டை மாற்றவில்லை.

---சமுதாய நலனே காரணம்.

ஆனால் பொதுசிவில்சட்டம் நடைமுறைபடுத்தப்படுமேயானால் அதற்கு கீழ் இந்த இடஒதுக்கீட்டை அனுபவிப்பதை விட மடிவது மேல். அல்லாஹ்வின் சட்டத்தை விட்டுக்கொடுத்து வயிறு வளர்ப்பதை விட, இருப்பதைக் கொண்டு வாழ்ந்து அல்லாஹ்வின் சட்டத்தை மேலோங்கச் செய்வதே மேல்.

இடஒதுக்கீடா ?, பொதுசிவில் சட்டமா ?. என்றால் பொதுசிவில் சட்டம் தடுக்கப்படுவதே மேல், அதனடிப்படையில் இதற்கு எதிர்ப்புதெரிவிக்காத ஜெயலலிதாவை விட்டு விலகியதனால் இதில் சுயநலமில்லை, இது சமுதாய நலனை பிரதிபலிக்கிறது.


---தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தே முன்மாதிரி:

பொதுசிவில் சட்டம் என்பது கன்டிப்பாக இந்த நாட்டில் எந்த கொம்பனாலும் நடைமுறைப்படுத்தவே முடியாது, அப்படி ஒரு நிலை வரும் என்றால் ஒவ்வொரு முஸ்லீமும் தங்களது உயிரைக் கொடுத்தேனும் அதை தடுப்பார்கள்.

அதனடிப்படையில் அனைத்து சமுதாய சேவைகளுக்கும் முன்மாதிரியாக திகழக் கூடிய தமிழ்நாடு தவஹீத் ஜமாத் இந்த பொதுசிவில் சட்டம் என்ற ஆரிய அடக்குமுறைக்கு எதிராக களமிறங்கி விட்டது. அல்லாஹூஅக்பர்.

ஆதரவு வாபஸ் என்றதும் ஜெயலிலதா அவர்கள் முதன் முதலாக பாஜகவுககு எதிராக குரல் கொடுத்துப் பார்த்தார்கள் இந்த ஆசை வார்த்தைக்கெல்லாம் அடங்கிவிடாது தவ்ஹீத் ஜமாத் என்பதை உணர்த்தப்பட்டு விட்டது.

ஏற்கனவே ஒருமுறை என்னை மன்னித்து விடுங்கள் இனி பாஜகவுடன் சேர மாட்டேன் என்றார் ஜெயலலிதா. அதே போல் மீண்டும் ஒருமுறை அல்லாஹ் சொல்ல வைப்பான்.

முழுக்க முழுக்க சமுதாய நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவை சிந்தித்து எடுத்த மாநிலத்தலைமைக்கு முஸ்லீம் சமுதாயம் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

Thanks to A.M.Farook,
Adirai

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!