Wednesday, October 29, 2014

பெருமை பிடித்தவன் அல்லாஹ் !

பெருமை பிடித்தவன் அல்லாஹ் 

 தொடரும் 1

இது என்னப்பா தலைப்பு தொடரும் னு போட்டிருக்கீங்கன்னு சந்தேகம் வரலாம்.இதுக்கு காரணம் வேற ஒன்னும் இல்லீங்க,பொதுவா ஒரே விஷயத்த போட்டு அலசுறத விட,கதம்பமா என்ன சப்ஜக்ட் பத்தியும் அலசுனா என்னா என்ற யோசனையில் வந்த தலைப்பே தொடரும் என்பது.

சரி இனி விஷயத்துக்கு வரலாம்.

பொதுவா,மனுஷனை இறைவன் அழகான படைப்பாக படைத்துள்ளதா சொல்றான்.அது போல அந்த மனுஷாலுக்கு பலஹீனத்தையும் வச்சே படசிருக்கான்.மிருகங்களுக்கு நாலு கால்கள் வச்ச இறைவன்,மனிதனுக்கு ரெண்டு கால்கள் வச்சி,அற்புதமான முறையில நடக்க விட்டிருக்கான்.ஆனால்,நம்மள விட வலுவான மிருகங்கள் ரெண்டு கால்களால் நடக்க இயலாது.இப்படி,எண்ணற்ற பிளஸ் பாயிண்ட்கள் நமக்கு உண்டு.அதுல ஒண்ணுதான் பகுத்து அறியும் தன்மையும்.

அது போல தான்,நமக்குள்ள நிறைய பலஹீனங்கள் இருப்பதும்.என்னதான்,நாம உயர்ந்த படைப்பா இருந்தாலும்,நமக்குள்ள நிறைய பலஹீனங்களை வச்சியே அல்லாஹ் படைத்துள்ளான்.இப்பிடி - பல கோணங்களில் - வகைகளில் நாம் பலஹீனமான படைப்பா இருக்கிறோம்.உதாரணமா,நமக்கு வருகிற மறதி,நோய்,வயோதிகம்,மரணம்,வறுமை இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.என்னதான் மனிதன்,செல்வந்தனாக,திடகாத்திரமானவனாக,வாலிபனாக இருந்தாலும் - இறுதியில் - ஒரு நேரத்தில் எல்லாமே மாறிப் போகும்.ஆக,கடைசியில் எல்லாமே பலஹீனமாக மாறிப் போய் விடும்.

ஆனால்,இந்த பலஹீனமான ஒரு விஷயத்தையே நாம் மறந்து விட்டு,திமிராக நடப்பதும்,பெருமை கொள்வதும்,ஏழைகளை,எளியவர்களை நசுக்குவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.உண்மையில் சொல்லப் போனால்,தெளிவாக சிந்தனை செய்து பார்த்தால்,திமிராக - பெருமையாக நடப்பதற்கு நமக்கு எள் முனை அளவு கூட உரிமை உள்ளதா என்றால்,அறவே கிடையாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

சரி,அப்படி திமிராக இருக்கவும்,பெருமைக்கு உரிமை உள்ளவனாகவும் தகுதி உள்ளவன்,மற்றும் கருவமாக இருக்கவும்  யாருக்கும் உரிமை  உண்டா? என்றால் ஆம் உண்டு.

அப்படியென்றால்,அந்த பெருமைக்கு,திமிருக்கு,கர்வததுக்கு  உரிமையானவன் யார்?

அவன்தான் ஏக இறைவன் (அல்லாஹ்).

7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.

திருக் குர் ஆன்

149. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book :1


 நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழி


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!