Saturday, October 11, 2014

சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பா மரணமடைந்தார்

இந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 94.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் இயங்கிய இந்தியன் நேஷனல் (INA) ஆர்மியில் கேப்டனாக பணியாற்றியவர் அப்பாஸ் அலி.

இந்திய தேசிய விடுதலைக்காக உயிரை பணயம் வைத்து நடத்திய போராட்டத்தில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல் மரண தணடனை வழங்கியது. 1947ல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் இந்திரா காந்தி அம்மையாரின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேசநலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உத்தர பிரதேச மாநிலம் அலிகார் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் மரணமடைந்தார். அவருக்கு ஒரு மகன் இரு மகள்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!