Sunday, August 23, 2015

சனாதன தர்மமும்,பள்ளி வாசல் இமாமும்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 


*******************
*************
*******


பள்ளி வாசலின் ஒலி பெருக்கியில் இருந்து வந்த அந்த தொழுகை அழைப்பில் முஸ்லிம்களின் உள்ளங்கள் அமைதி அடைந்து,ஏக இறைவனை வணங்க எல்லாரும் பள்ளி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

"டேய்,அப்துல் காதர்,தொழுக பாங்கு சொல்லியாச்சி,இந்த பண்ணா மீனை வீட்டுல்ல கொடுத்து விட்டு,வெர்சன பள்ளிக்கி வா?என்று அப்துல் காதரின் அப்பா முஹம்மது தம்பி அவர் வாங்கிய பண்ணா மீனை,தன் பேரனிடம் கொடுத்து விட்டு,பள்ளி நோக்கி விரைந்தார்.

.இப்படி மார்க்கெட்,வங்கி,தோப்பு,குளம்,வெட்டிப் பேச்சு பேசும் மர நிழல் மனிதர்கள்,இப்படி எல்லா மக்களும் பள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

அழகிய கம்பீரமான அந்தப் பள்ளி வாசலின் உள்ளே,தொழுகைக்கு முன்,செய்ய வேண்டிய அங்க சுத்தி எனப்படும் உழு செய்து கொண்டு இருந்தனர் மக்கள்.அந்த ஹவுல் எனப்படும் தண்ணீர் தடாகத்தில் உலா வரும் மீன்களின் அழகை ரசித்தும்,பிடிக்க முயற்சிக்கும் கவனத்திலும் சிறுவர்கள் இருக்க,அந்த பள்ளி வாசலின் மோதினார் முகைதீன் அவர்கள் இகாமத் சொல்ல ஆரம்பித்தார்.


தொழுகை நடக்க இருப்பதன் ஒரு சமிக்கையே இந்த இகாமத் எனப்படும் வாசகங்கள்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 



********************************
**********************
*************
எல்லாரும் அவரவர் சப்பில் வந்து நிற்க,தொழுகை நடத்தப் போகும் இமாம் அவர்கள் ,எல்லாருக்கும் முன்பாக வந்து நின்றார்.நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எப்படி நமக்கு காட்டித் தந்தார்களோ,அப்படியேதான் தொழ வேண்டும் என்ற ஹதீஸை சொல்லி விட்டு தொழுகை நடத்த ஆரம்பித்தார்,அந்த இமாம் பஷீர் அஹமது.

********************************************
டேய் தே---பயலே,இங்க வாடா,என்ற அந்த ஊரின் உயர் சாதி இந்துவின் அதட்டலைக் கேட்டு,அதறிந்து போனார் பாஸ்கர்,இந்து சனாதன தர்மத்தின் படி அவர் ஒரு தாழ்ந்த சாதி,சூத்திரன்.அசிங்கமான பொருள் படும் படி அதட்டிய அவனின் வயது,பாஸ்கரனின் வயதை விட,கம்மிதான்.ஆனால்,அவன் உயர்ந்த சாதி,இவன் தாழ்ந்தவன்.அவர்களின் கணக்குப் படி.

டேய்,என்னடா நீங்கல்லாம் மெட்ராஸ் போய் படிச்சாலும்,அமெரிக்கா போய் கிழிச்சாலும்,எங்களுக்கு கீழ்தாண்டா.டேய் கேட்டுக்க,நாளைக்கி - பறை மேளத்தை எடுத்துக்குட்டு எங்க தெருவுக்கு உங்க ஆளுக எல்லாரையும் கூட்டிக்கிட்டு வா,அங்க ஒரு சாவு விழுந்து போச்சி,அப்படி வரலன்னா,உங்களை கோல பண்ணுவோம்,பொண்ணுங்களை கற்பழிப்போம் வீடுகளை தரை மட்டமாக்குவோம்,சாக்கிரதை.


பாஸ்கரனால் பேச முடியவில்லை.எப்படி முடியும்? பேசினால் அவனுக்கு அவன் நாக்கு இருக்காது,கால் நரம்பை வெட்டி விடுவார்கள்.என்னதான்,வக்கீலாக இருந்தாலும் - அவனால் அந்த இடத்தில பேச முடியாது,அந்த இடத்தில அவன் ஒரு தாழ்ந்தவன்.அவனை அசிங்கமாகப் பேசும்,மற்றவனோ உயர் சாதிக்காரன்.

சரி ஐயா ! பாஸ்கரனால் அது மட்டுமே சொல்ல முடியும் ,அதை சொன்னான்,சொல்லும் போது,இரு கைகளையும் கூப்பி,சான் கிடையாக அவன் கால்களில் விழுந்து,எழுந்தான்.அதை அந்த உயர் சாதிக்காரன் ரொம்பவே ரசித்தான்,தான் உயர் சாதியில் பிறந்ததற்கு.

**********************************
டேய் பாஸ்கர் நீ என்னடா சொல்றே? நாமெல்லாம் முஸ்லிம்களாக மாறிட்டா,அந்த உயர் சாதி காரங்க கிட்ட போய் நாம் கூனி குறுகி நிக்க முடியாதா?ஆச்சர்யமா இருக்குடா?அப்படி என்னதாண்டா இருக்கு அந்த இஸ்லாத்துல?

ஆமாடா,இஸ்லாத்தைப் பத்தி நிறைய படிசிருக்கேன்.இஸ்லாம் படி,இறைவன் ஒண்ணுதான், இறைவனின் கடைசி தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.அல்லாஹ்வுக்கு முன்னாடி எலாரும் சமம்.ஒரு அரபியை விட,ஒரு அரபி இல்லாதவனோ - ஒரு அரபி இல்லாதவனைவிட - ஒரு அரபியோ உயர்ந்தவன் இல்லை.இப்படி இறைவனின் வேதமான குர் ஆணிலும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளிலும் நிறைய இருக்கு,இப்போ நமக்கு 24 மணி நேரம் மட்டும் தான் இருக்கு.இப்பவே நம்ம ஊர்ல இருக்குற பள்ளி வாசலுக்குப் போய்,இஸ்லாத்தை ஏத்துக்குவோம்.அடுத்த நிமிஷமே நம்ம எலாருடைய இன இழிவும் நீங்கிடும்,உடனடியா அவங்களோட சரி சமமா தொழுகை நடத்தலாம்.அந்த உயர் சாதிக்காரங்களும் நம்மள கொட்டு அடிக்க கூப்பிட மாட்டாங்க,கேவலப் படுத்த மாட்டாங்க ,இன்னும் சொல்ல போனா நம்மள என்ன பாய் ன்னு கூப்பிடுவாங்க.அதனால வாங்க எல்லாரும் பள்ளி வாசல் போகலாம்.


அல்லாஹ்வைத் தவிர ,வணங்கி வழிபட வேறு யாரும் இல்லை,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் கடைசி தூதராக இருக்கிறார்கள்.
பாஸ்கரன் உட்பட ஒரு சிறு கூட்டமாக ஆண்களும்,பெண்களும் இஸ்லாத்தை தழுவிக்கொள்ள,அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என மக்கள் ஆனந்த முழக்க மிட்டனர்.

*****************************************
மறுநாள்,பாஸ்கரனும் , மற்ற மக்களும்,இஸ்லாத்துக்கு மாறிவிட்டதை அறிந்த உயர் சாதி மக்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்து கொண்டும்,இனி பறை அடிக்கவும்,குடித்து விட்டு,சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கவும்,மலம் அள்ளவும் இனி என்ன செய்வது என விழித்துக் கொண்டிருந்தனர்.
***************************************
இஸ்லாம் ஏற்ற மக்கள் எல்லாரும்,இஸ்லாம் பற்றி அறிய 3 மாத பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
*******************************************
பயிற்சி முடிந்து,இதோ இந்த முன்னாள் பாஸ்கர்,பஷீர் அஹமதுவாக மாறி,முஸ்லிம்கள் எல்லாரையும் தொழுகை வைக்க,இமாமாக நம் முன்னாள் நின்று கொண்டிருக்கிறார்.



1 comment:

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!