Monday, August 31, 2015

இவர்கள்...!

பிஸ்மில்லாஹ் 
 
 
ஏக இறைவனைத் தொழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால், கட்டப்பட்ட பள்ளி வாசல்கள். அந்தப்  பள்ளியின் பெயர் மாநிலமெங்கும் பரவவேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில் ஆடம்பர வேலைப் பாடுகள். இந்தியாவின் எந்த மாநிலத்தில் எந்தக் கல் கிடைத்தாலும் - அதைக் கொண்டு தரைகள், தூண்கள் இத்யாதி இத்யாதிகள்!
"ஒரு காலம் வரும்போது, பள்ளி வாசல்களைக் கட்டி, பெருமைப்பட்டுக் கொள்வார்கள்" என்ற கருத்தில் உள்ள அண்ணல் நபிகளின் `பொன்மொழி இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.
இப்படி பார்த்து, பார்த்து,பள்ளி வாசல் கட்டியாயிற்று ! ஐங்காலத் தொழுகையும் நடைபெறுகிறது. அனைத்தும் அமர்க்களமாய் நடைபெறும் சந்தோஷ தினங்கள் தான் என்றென்றும் ! இறைவனை தியானிப்பதின் மகோன்னதம், அது மிக உயர்ந்த பாக்கியம் அல்லவா ?
எல்லாவற்றையும் செய்து விட்டு, மிக முக்கிய, இஸ்லாத்தின் உன்னத பதவியான,தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தம சஹாபாக்கள் பார்த்த அந்த பணியை செய்யும் "இவர்களை" ஏனோ நம் மக்கள் மறந்து விட்டார்கள். 
ஆம் ! கொடுமையான தண்டனையின் உச்சம் அது ! சுடுமணல்! வெற்றுடம்பு,தீக்காயங்கள், சுடும் பாறை நெஞ்சின் மீது வைத்து, `ஏக இறைவனை மறு` என்று சொன்ன இறைநம்பிக்கை அற்ற அந்த மக்கத்து குரைஷிகளைப் பார்த்து "ஏகன் ஒருவனே ! ஏகன் ஒருவனே! என்று முழங்கிய பிலால் (ரலி) அவர்கள் செய்த அந்தப் பணி அல்லவா? அது !
இரண்டு கண்களும் தெரியாது, சமுதாய அந்தஸ்து கிடையாது. ஆனால், ஈருலக தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - அந்த நல்ல மனிதரை உயரிய பணிக்கு நியமித்தார்கள். அவர்கள் தான் உம்மி மக்தூம் (ரலி). அந்த இரு பெருந்தகைகளும் செய்த பணி "முஅத்தின்" தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் பெரிய பணி. இஸ்லாத்தின் மணி மகுடமாய் விளங்கும் அற்புத பணிஅல்லவா அது!
 பாங்கு சொல்வதற்குள்ள நன்மையையும், முதல் சஃபில் நின்று தொழும் நன்மையையும் ஒருவர் அறிந்தால் அதை அடைய சீட்டு குலுக்கி போட்டு பெற முயற்சிப்பார்கள் என்ற ஹதீசும், பாங்கு சொன்னவர் மறுமையில் கழுத்து நீண்டவராக வருவார் என்ற் ஹதீசும், பாங்கு சொன்னவருக்காக அவர் பாங்கின் ஒலியைக் கேட்ட ஜீவராசிகள் எல்லாம்  அவருக்காக வேண்டி, சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீசும், பாங்கின் மகிமையை, அதை சொல்லும் "முஅத்தின்"களின் உயர்வை எடுத்துக் காட்டும் வகை அல்லவா ?
அந்த அருமையான பணியை செய்யும், அந்த ஆத்மாக்களின் வாழ்வு சுபிட்சமாக உள்ளதா? இல்லை ! இல்லை ! இல்லவே இல்லை ! ஏன்?
அந்த நல்ல பணியை செய்யும் அவர்களை நாம் எந்த இடத்தில வைத்திருக்கிறோம்.நாம் அனைவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
நாம் அந்த உன்னத பணியை விளங்கவில்லை, அல்லது மறந்து விட்டோம்."முஅத்தின்" என்ற பெயரையே மோதினாராக்கி, களங்கப்படுத்திவிட்டோம். அவர்கள் பாங்கு மட்டும் சொல்லவில்லை. அதிகாலையில் எழுந்து , தன் அடிப்படைதேவைகளை முடித்து மழையோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாமல்,பள்ளிவாசல் கதவு திறந்து லைட் போட்டு, ஹவுளில், கக்கூஸில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொண்டுவிட்டு, பாங்கு சொல்லும் நேரம் வந்ததும் அந்த குறித்த நேரத்தில் பாங்கு சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவராக தொழவரும் நபர்களின் கண்ணுக்கு ஏனோ ஒன்று உதாரணமாக,தண்ணீர் தேங்கியிருப்பது குறையாகத் தெரியும் (குறைகள் மட்டும்தான் தெரியும்) அதற்கு அந்த பள்ளியின் மோதினாரைத்தான் ஒரு பிடிபிடிப்பார்கள். முத்தவல்லி ,தொழவைக்கும், இமாம், நாற்காலிகளில் தொழும் நல்லவர்கள், ஏன் எல்லோரும் அந்த "முஅத்தினை" கேட்கவேண்டிய கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பார்கள்.நாம் அதை சரி செய்து,உதவலாமே என வருபவர் மிக மிக சிலரே.
தொழுகை முடிந்தவுடன், பள்ளி வாசலை சுத்தம் செய்தல், கழிவறைகளை கண்காணித்தல்  இப்படியான சில வேலைகளில் நேரங்கள் நகரும் !
காலை, பகல்,  இரவு உணவுக்கு தனது அடுக்குச் சாப்பாட்டு செட்டைத்  தூக்கிக் கொண்டு அன்றைய பொழுதிற்கு உணவளிக்கும் வீட்டிற்கு சென்று ,அலைந்து திரிய வேண்டும்.பள்ளிவாசலின் மின்விசிறியை ஜமாத் தொழுகை நேரம் முடிந்ததும்  ஒரு குறிப்பிட்ட அவகாசத்தில் நிறுத்திவிடுவார்(பள்ளி ரூல்ஸ்), ஜமாத் தொழுகை முடிந்து லேட்டாக தொழவரும் நபர் தன்னிச்சையாக மின்விசிறியை போட்டுக் கொண்டு தொழுது விட்டதை யாரும் பார்த்துவிட்டால அதனை முத்தவல்லியிடம் சொல்லி இவருக்கு திட்டும் வாங்கிக் கொடுக்கும் ஒரு கூட்டமும் பள்ளியில் அமர்ந்துதான் இருக்கும்.
சொந்த் வீடு, மக்களை பார்க்க போதிய நேரம் ஒதுக்க இயலாது, லீவு கிடைப்பது இல்லை, சம்பளமும்  சொல்லிக் கொள்ளும்படியாக பெரும்பாலான பள்ளிவாசல்களில் கிடையாது. இன்றையச் சூழல் விலைவாசியில் அந்த சம்பளத்தைக் கொண்டு 10 நாட்கள்கூட வாழ்க்கையையை ஓட்ட இயலாத சூழல்.
இன்னும், அவர்களுக்கு மன உளைச்சல்கள் , காயங்கள், ஏச்சுப் பேச்சுகள் ஏராளம்.
மார்க்கத்தின் உயர்ந்த பணி செய்யும் அம்மக்களைப் பற்றி, நாம் சிந்தனை செய்தோமா ? நம் அருகில் உள்ள் அப்பள்ளியின், முஅத்தின்களை அரவணைத்திருக்கிறோமா ? இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை !இனியாவது, இன்ஷா அல்லாஹ் அந்த முஅத்தின்களின் தோள்களில் தோழமையுடன் கைபோட்டு, அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அணுகி, அவர்கள் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் அனுசரனையாக விளங்கி, அந்த உயர்ந்த பணி செய்யும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். ஏனெனினில் அவர்கள் நீண்ட கழுத்துடன் மறுமையில் (தனி அந்தஸ்துடன்) வருவார்கள் ! எல்லா ஜீவராசிகளும் அவர்களுக்காக சாட்சி சொல்லும் !
நாம் !?

(‘முஅத்தின்’களின் இப்பிரச்சனையை  நாம் எவ்வாறு களைய வேண்டும்?அவர்களின் சம்பள உயர்வுக்கு என்ன செய்ய வேண்டும் ?போன்ற கருத்துக்கள் பரிமாறி,அதை எப்படி முன்னெடுப்பது?அதற்கு நாம் எவ்வாறு பங்களிக்கலாம் என கருத்துக்கள் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்,நன்றி)
 
 
 
 
 http://adirainirubar.blogspot.com/2015/08/blog-post_31.html#
 

Saturday, August 29, 2015

அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா !?

மனிதனின் வாழ்வில் மகிழ்வைத் தொலைத்து மன நிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாய்ப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும்.
அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவை யாவும் நடைமுறை வாழ்வில் நிகழக் கூடிய சந்தேகங்களேயாகும்.
உதாரணமாகச் சொல்வதாயின் வீட்டைப் பூட்டிவிட்டோமா.? சமையல் கேஸை ஆஃப் செய்தோமா.? பாக்கிப் பணம் திரும்பப் பெற்றோமா..? அல்லது வெளியில் செல்லும்போதோ, பயணத்திலோ, அலுவலகப்பணியிலோ, ஏதாவது ஒரு பொருளை எடுத்துவர மறந்துவிட்டு கொண்டுவந்தோமா..? இல்லையா.? என்று சந்தேகப்படுவது. அடுத்துச் சொல்வதானால் சந்தேக நிலையில் உள்ள சில அறியாத விசயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது, ஆதாரமில்லாத சில செய்திகளைக் கேள்விப்படும்போது சந்தேகத்தோரணையில் கேட்பது இதுபோன்ற இப்படி பலவகையில் ஒருமனிதனுக்கு நடைமுறை வாழ்வில் அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு.
ஆனால் சிலரது சந்தேகங்கள் அவசியமற்றதாக நின்றாலும் குற்றம், நடந்தாலும் குற்றம், பார்த்தாலும் குற்றம்,பேசினாலும் குற்றம் என்று சொல்வதுபோல சதா எல்லாவற்றிற்கும் எல்லா விசயத்திற்கும் சந்தேகப்படுவது ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்பவாழ்வில் திருமண வாழ்வில் ஏற்படும் சந்தேகம்தான் எல்லா சந்தேகங்கங்களை விடவும் மிக மோசமானவையாகவும் பிரச்சனைக்குரியவையாகவும் இருக்கிறது.இந்த சந்தேகம்தான் நிம்மதியைத் தொலைக்கச் செய்து விடுகிறது. இச்சந்தேகம் கொண்டவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
சந்தேகம் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் குணங்களில் ஒன்றாக இருந்தாலும் . அதேசமயம் சூழ்நிலையைப் பொருத்து ஏற்படக் கூடியவையாக இருக்கிறது. இப்படி சூழ்நிலைச் சந்தேகங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பொருத்து அதிகபட்சம் ஏற்றுக்கொள்ள கூடியவையாகவும் இருக்கிறது. அர்த்தமுள்ள சந்தேகங்கள் ஆரோக்கியமானதே அதேசமயம். அர்த்தமில்லா அவசியமற்ற சந்தேகங்கள் சந்தோசத்தைத் தொலைத்து சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது.
ஒருவருக்கு அவசியமற்ற சந்தேகங்கள் சதா எந்நேரமும் மனதைவிட்டு மாறாமல் இருக்குமானால் எதற்கெடுத்தாலும் சந்தேகக் கண்களால் பார்த்துப்பழகி அதுவே ஆட்கொள்ளத்தொடங்கி விட்டால் அதுவே நாளடைவில் மனநோயாளியாகக்கூட மாறிவிட வாய்ப்பாகிவிடுகிறது.
ஆகவே பெற்றோர்களானாலும், கணவன் மனைவி, பிள்ளைகளானாலும், சகோதர,சகோதரி உறவினார்கள் மற்றும் நட்புகளானாலும் புரிந்துணர்வு மிகமிக அவசியம் இருக்கவேண்டும். ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.நம்பிக்கை தளர்ந்து வலுவிழந்து விடுமாயின் அந்த இடத்தை சந்தேக நோய் தான் ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு பிரச்சனைகளுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.
தேவையற்ற சந்தேகத்தினால் எத்தனையோ கணவன் மனைவிமார்களும், குடும்பங்களும், உறவுகளும் நட்புகளும் சிதறுண்டு நாலாபுறமும் பிரிந்து கிடப்பதை நாம் இவ்வுலகில் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம் பல ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிகிறோம். இப்படி அவசியமற்ற சந்தேகத்தினால் ஏற்படும் பிரிவுகளை நினைக்கும்போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.
குடும்பப் பிரச்சனையில் ஏற்படும் சந்தேகங்கள் கணவன் மனைவிக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளினால் சந்தேகங்கள் நாளடைவில் பெரிதாகி வளர்ந்து காரணத்தை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் சந்தேகத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அநியாயத்திற்கு தன்னை மாய்த்துக் கொண்டவர்களும் நிறையபேர் உண்டு.
மற்ற சந்தேகங்களை விட ஒரு மனிதனுக்கு குடும்ப உறவில் சந்தேகம் வந்து விட்டால் அவனிடம் எவ்வளவு செல்வமிருந்தாலும் பணிவிடை செய்ய ஆயிரம் உதவியாளர்கள் இருந்தாலும் மனதில் நிம்மதிமட்டும் இருப்பதில்லை.. நிம்மதியில்லாத வாழ்க்கை நரகவேதனைக்குச் சமம் என்றுதான் சொல்லமுடியும்.நம்பிக்கைதான் வாழ்க்கை இதை நன்கு உணர்ந்தவர்கள் இன்புற்று வாழ்வார்கள். இல்லையேல் துன்பத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு நடைபிணமாகத்தான் வாழமுடியும். ஆகவே அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருவதில்லை என்பதை உணர்ந்து அவசியமற்ற சந்தேகங்களைத் தவிர்த்துக் கொண்டு நமது இவ்வுலக வாழ்க்கையை ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்வோமாக...!!!
அதிரை மெய்சா
 
 http://adirainirubar.blogspot.com/2015/08/blog-post_30.html

Wednesday, August 26, 2015

அதிரையில் சம்பவம்:புது மாப்பிள்ளை கடத்தி,சிறை வைப்பு!!

நமதூரில் கடந்த சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒரு வினோதமான, வக்கிரமான, கண்டிக்கத்தக்க பழக்கம் நிலவி வருகின்றது!  அதாவது, இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்றால், அவரின் ‘ஆப்த நண்பர்கள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் விடலைகள் உஷார் ஆகித் தமக்குள் திட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.

அது என்ன ?

‘எப்படியாவது புது மாப்பிள்ளையைப் புதுப் பெண்ணுடன் முதலிரவில் சேர விடக் கூடாது’ என்ற வக்கிரமான – நமதூர்ப் பரிபாஷையில், ‘பெரலி பண்ணும்’ – வன்முறைக் கலாச்சாரம்!  இதில் பல முறைகளைக் கடைப்பிடித்துக் காலித்தனம் செய்கின்றனர் நம் இளைஞர்கள்!

- புது மாப்பிள்ளையை அன்றிரவு happy ride என்று சொல்லி ஏற்றிக்கொண்டு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்களில் அந்தத் ‘தோழப் பிள்ளைகள்’ வெளியூர்களுக்கு எங்காவது கொண்டுபோய் இரவு முழுவதும் மறைத்து வைப்பது.

- புது மாப்பிள்ளைக்கும் தோழப் பிள்ளை(!)களுக்கும்கூட அறிமுகமில்லாத கிராமப்புறங்களுக்குள் சென்று, அன்றிரவு முழுவதும் அரட்டை அடிப்பது. (இன்னொன்றும் அடிப்பார்களோ என்னவோ, தெரியாதப்பா.)

- எல்லோருமாகச் சேர்ந்து Second show சினிமாவுக்குப் போய், சினிமா பார்ப்பது! அந்தப் புது மாப்பிள்ளைக்கு சினிமாவில் கவனம் இருக்குமா என்ன?

- அல்லது, ஊரிலேயே, பெண் வீட்டுப் பந்தலிலேயே, புதுப் பெண்ணின் மனக் குமுறலுக்கு முன்னாலேயே, புது மாப்பிள்ளையைச் சூழ்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டு, அவனை வீட்டுக்குள் செல்லவிடாமல் அன்றிரவு முழுவதும் – அதாவது விடியும்வரை - ‘கேரோ’ பண்ணி வைத்துக்கொள்வது.

- அல்லது, புதுப்பெண் – புது மாப்பிள்ளையின் அலங்கார அறையில் கூடி அமர்ந்துகொண்டு, பெண்ணையும் மாப்பிள்ளையையும் முதலிரவில் தனிமையில் சந்திக்க விடாமல் தடுத்து வைப்பது.

- இத்தியாதி, இத்தியாதி.....

இது போன்ற ‘கழிசடைக் கலாச்சாரம்’ எங்கிருந்து கிடைத்தது இவர்களுக்கு?! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், இரவும் பகலும் இதய வேட்கையால், என்னவெல்லாம் அந்தப் புது மணமக்கள் கனவு கண்டுகொண்டு இருந்திருப்பார்கள்!?  இதைத் தவிடுபொடியாக்கும் இந்தத் தறிகெட்ட பழக்கம் நம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வரலாமா?  அவர்கள் சிந்திக்கட்டும்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்!

“அப்புடித்தாண்டீ, என்னட மப்ளையையும் கடத்திக்கிட்டு போய்ட்டானுவ. இங்கே, வூட்லே வாப்பா கத்துறாஹ. காக்கா, மாமாமார் அங்கங்கே ஓடித் தேடினா, எங்கேயுமே இல்லெ!  கடைசீலே, அடுத்த நாள் காலைலே மொகத்தெத் தொங்க போட்டுக்குட்டு வந்தாரு என் மாப்ளே” என்று பழைய மணப்பெண் ஒருவர் அங்கலாய்ப்பது நம் காதில் விழுகின்றது!

இளைஞர்களே!  இஸ்லாமியப் பண்பாட்டின் பக்கம் திரும்பி வாருங்கள்!  வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உங்கள் Islamic Identity யைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்!

இது மட்டுமில்லை!  நமது பண்பாட்டிற்கே உலைவைக்கும் ‘வெடி வெடிப்பு’ப் பழக்கம்!  திருமணத்தன்று பின்னிரவில் செவிப்பறைகளைத் தாக்கும், கண் பார்வையைக் கெடுக்கும் வெடிவெடிப்பைச் சர்வ சாதாரணமாகச் செய்கின்றனர், திருமண வீட்டுக்குப் பக்கத்தில்!  பிறந்து சில நாட்களே ஆன சிறு குழந்தைகள், முதியோர்கள், இதய நோயாளிகள் போன்றோருக்குத் தீங்கு விளைக்கும் இந்த வெடிக் கலாச்சாரம் யாருடையது?  மாற்று மதத்தினர், கல்யாணமென்றும் கருமாதி என்றும் பாராமல், வெடி வெடித்துக் மகிழ்வர். அவர்களுடையதை நாம் பின்பற்றலாமா?  சிந்தியுங்கள், வாலிபர்களே!

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் சொன்னதை இங்கு உங்களுக்கு நினைவூட்டுவது பொருத்தம் என்று கருதுகின்றேன்:
من تشبه بقوم فهو منهم

(எவரொருவர் பிற சமுதாயத்தைப் போன்று செய்வாரோ, அவர், அவர்களைச் சார்ந்தவராவார்.)

மேற்கண்ட எண்ணக் குமுறலை எழுத்தில் வடித்து இணையத்தில் பதிக்க நினைத்துக்கொண்டிருந்தபோது என் பேரப்பிள்ளை ஒருவன் சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

அண்மையில் நமதூரில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினான்.  புது மணமக்கள் எப்படியோ, தோழப் பிள்ளைகளின் கண்ணைக் குத்திவிட்டு, மணவறைக்குள் நுழைந்துவிட்டார்களாம்.  இதையறிந்த ‘தோழப் பிள்ளைகள்’, ‘விடக் கூடாது இவனை’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, பெண் வீட்டாரிடம், “அந்த ரூமைத் திறந்து தாருங்கள்” என்று அடம் பிடித்தார்களாம். ஊம்.....!  பெண் வீட்டார் அசைந்து கொடுக்கவில்லை!

“அப்டினா, நாங்க இந்த அறைக்கு முன்னாலேயே படுத்துக்குவோம்” என்று கூறி, அடுத்தடுத்துப் பரவலாகப் படுத்துக்கொண்டார்களாம் - இரவு முழுதும், விடியும்வரை!

“அடப் பாவமே!” என்று நான் ஆச்சரியத்துடனும் சினந்தும் உணர்ச்சியை வெளிப்படுத்தியபோது, அந்தப் பேரன் சொன்னான்:

“இல்லப்பா!  இந்தப் புது மாப்புளேயும் இதுக்கு முன் பலரின் கல்யாணத்திலும் இதுபோல் செஞ்சிருக்கான், அப்பா!”

என்னத்தச் சொல்ல?

அபூ பிலால்

http://www.adirainews.net/2015/08/blog-post_757.html#comment-form

Sunday, August 23, 2015

சனாதன தர்மமும்,பள்ளி வாசல் இமாமும்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 


*******************
*************
*******


பள்ளி வாசலின் ஒலி பெருக்கியில் இருந்து வந்த அந்த தொழுகை அழைப்பில் முஸ்லிம்களின் உள்ளங்கள் அமைதி அடைந்து,ஏக இறைவனை வணங்க எல்லாரும் பள்ளி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

"டேய்,அப்துல் காதர்,தொழுக பாங்கு சொல்லியாச்சி,இந்த பண்ணா மீனை வீட்டுல்ல கொடுத்து விட்டு,வெர்சன பள்ளிக்கி வா?என்று அப்துல் காதரின் அப்பா முஹம்மது தம்பி அவர் வாங்கிய பண்ணா மீனை,தன் பேரனிடம் கொடுத்து விட்டு,பள்ளி நோக்கி விரைந்தார்.

.இப்படி மார்க்கெட்,வங்கி,தோப்பு,குளம்,வெட்டிப் பேச்சு பேசும் மர நிழல் மனிதர்கள்,இப்படி எல்லா மக்களும் பள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

அழகிய கம்பீரமான அந்தப் பள்ளி வாசலின் உள்ளே,தொழுகைக்கு முன்,செய்ய வேண்டிய அங்க சுத்தி எனப்படும் உழு செய்து கொண்டு இருந்தனர் மக்கள்.அந்த ஹவுல் எனப்படும் தண்ணீர் தடாகத்தில் உலா வரும் மீன்களின் அழகை ரசித்தும்,பிடிக்க முயற்சிக்கும் கவனத்திலும் சிறுவர்கள் இருக்க,அந்த பள்ளி வாசலின் மோதினார் முகைதீன் அவர்கள் இகாமத் சொல்ல ஆரம்பித்தார்.


தொழுகை நடக்க இருப்பதன் ஒரு சமிக்கையே இந்த இகாமத் எனப்படும் வாசகங்கள்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 



********************************
**********************
*************
எல்லாரும் அவரவர் சப்பில் வந்து நிற்க,தொழுகை நடத்தப் போகும் இமாம் அவர்கள் ,எல்லாருக்கும் முன்பாக வந்து நின்றார்.நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எப்படி நமக்கு காட்டித் தந்தார்களோ,அப்படியேதான் தொழ வேண்டும் என்ற ஹதீஸை சொல்லி விட்டு தொழுகை நடத்த ஆரம்பித்தார்,அந்த இமாம் பஷீர் அஹமது.

********************************************
டேய் தே---பயலே,இங்க வாடா,என்ற அந்த ஊரின் உயர் சாதி இந்துவின் அதட்டலைக் கேட்டு,அதறிந்து போனார் பாஸ்கர்,இந்து சனாதன தர்மத்தின் படி அவர் ஒரு தாழ்ந்த சாதி,சூத்திரன்.அசிங்கமான பொருள் படும் படி அதட்டிய அவனின் வயது,பாஸ்கரனின் வயதை விட,கம்மிதான்.ஆனால்,அவன் உயர்ந்த சாதி,இவன் தாழ்ந்தவன்.அவர்களின் கணக்குப் படி.

டேய்,என்னடா நீங்கல்லாம் மெட்ராஸ் போய் படிச்சாலும்,அமெரிக்கா போய் கிழிச்சாலும்,எங்களுக்கு கீழ்தாண்டா.டேய் கேட்டுக்க,நாளைக்கி - பறை மேளத்தை எடுத்துக்குட்டு எங்க தெருவுக்கு உங்க ஆளுக எல்லாரையும் கூட்டிக்கிட்டு வா,அங்க ஒரு சாவு விழுந்து போச்சி,அப்படி வரலன்னா,உங்களை கோல பண்ணுவோம்,பொண்ணுங்களை கற்பழிப்போம் வீடுகளை தரை மட்டமாக்குவோம்,சாக்கிரதை.


பாஸ்கரனால் பேச முடியவில்லை.எப்படி முடியும்? பேசினால் அவனுக்கு அவன் நாக்கு இருக்காது,கால் நரம்பை வெட்டி விடுவார்கள்.என்னதான்,வக்கீலாக இருந்தாலும் - அவனால் அந்த இடத்தில பேச முடியாது,அந்த இடத்தில அவன் ஒரு தாழ்ந்தவன்.அவனை அசிங்கமாகப் பேசும்,மற்றவனோ உயர் சாதிக்காரன்.

சரி ஐயா ! பாஸ்கரனால் அது மட்டுமே சொல்ல முடியும் ,அதை சொன்னான்,சொல்லும் போது,இரு கைகளையும் கூப்பி,சான் கிடையாக அவன் கால்களில் விழுந்து,எழுந்தான்.அதை அந்த உயர் சாதிக்காரன் ரொம்பவே ரசித்தான்,தான் உயர் சாதியில் பிறந்ததற்கு.

**********************************
டேய் பாஸ்கர் நீ என்னடா சொல்றே? நாமெல்லாம் முஸ்லிம்களாக மாறிட்டா,அந்த உயர் சாதி காரங்க கிட்ட போய் நாம் கூனி குறுகி நிக்க முடியாதா?ஆச்சர்யமா இருக்குடா?அப்படி என்னதாண்டா இருக்கு அந்த இஸ்லாத்துல?

ஆமாடா,இஸ்லாத்தைப் பத்தி நிறைய படிசிருக்கேன்.இஸ்லாம் படி,இறைவன் ஒண்ணுதான், இறைவனின் கடைசி தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.அல்லாஹ்வுக்கு முன்னாடி எலாரும் சமம்.ஒரு அரபியை விட,ஒரு அரபி இல்லாதவனோ - ஒரு அரபி இல்லாதவனைவிட - ஒரு அரபியோ உயர்ந்தவன் இல்லை.இப்படி இறைவனின் வேதமான குர் ஆணிலும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளிலும் நிறைய இருக்கு,இப்போ நமக்கு 24 மணி நேரம் மட்டும் தான் இருக்கு.இப்பவே நம்ம ஊர்ல இருக்குற பள்ளி வாசலுக்குப் போய்,இஸ்லாத்தை ஏத்துக்குவோம்.அடுத்த நிமிஷமே நம்ம எலாருடைய இன இழிவும் நீங்கிடும்,உடனடியா அவங்களோட சரி சமமா தொழுகை நடத்தலாம்.அந்த உயர் சாதிக்காரங்களும் நம்மள கொட்டு அடிக்க கூப்பிட மாட்டாங்க,கேவலப் படுத்த மாட்டாங்க ,இன்னும் சொல்ல போனா நம்மள என்ன பாய் ன்னு கூப்பிடுவாங்க.அதனால வாங்க எல்லாரும் பள்ளி வாசல் போகலாம்.


அல்லாஹ்வைத் தவிர ,வணங்கி வழிபட வேறு யாரும் இல்லை,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் கடைசி தூதராக இருக்கிறார்கள்.
பாஸ்கரன் உட்பட ஒரு சிறு கூட்டமாக ஆண்களும்,பெண்களும் இஸ்லாத்தை தழுவிக்கொள்ள,அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என மக்கள் ஆனந்த முழக்க மிட்டனர்.

*****************************************
மறுநாள்,பாஸ்கரனும் , மற்ற மக்களும்,இஸ்லாத்துக்கு மாறிவிட்டதை அறிந்த உயர் சாதி மக்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்து கொண்டும்,இனி பறை அடிக்கவும்,குடித்து விட்டு,சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கவும்,மலம் அள்ளவும் இனி என்ன செய்வது என விழித்துக் கொண்டிருந்தனர்.
***************************************
இஸ்லாம் ஏற்ற மக்கள் எல்லாரும்,இஸ்லாம் பற்றி அறிய 3 மாத பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
*******************************************
பயிற்சி முடிந்து,இதோ இந்த முன்னாள் பாஸ்கர்,பஷீர் அஹமதுவாக மாறி,முஸ்லிம்கள் எல்லாரையும் தொழுகை வைக்க,இமாமாக நம் முன்னாள் நின்று கொண்டிருக்கிறார்.



Saturday, August 22, 2015

இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன் ???

 அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்) இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன்.


இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது"என்னுடைய மாமா சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.


அப்போது அவர் "நான் நீண்ட காலமாக தாவா பணிகளை மேற்கொண்டு வருகிறேன். "1984 காலகட்டங்களில் சென்னை பூந்தமல்லியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.அதில் யாரை உரையாற்ற அழைப்பது என்று ஆலோசித்தப்போது பிஜே என்ற இமாம் ஒருவர் தொண்டி என்ற ஊரில் இருக்கிறார்.நல்ல பேச்சாற்றல் உள்ளவர் அவரை அழைக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.


அவரிடம் டெலிபொன் வசதி இல்லாத காரணத்தால் நேரில் சென்று அழைப்பதற்காக என்னை நியமித்தனர்.என்னிடம் அவருடைய வீட்டை விசாரிக்கும் போது அவருடைய தந்தை மளிகை கடை வைத்திருக்கிறார். அவரை காண வேண்டும் என்று விசாரிக்குமாறு அறிவுறுத்த பட்டது.


ஏனென்றால் பிஜே விற்கு அந்த அளவு எதிர்ப்பிருந்த காலகட்டம் அது. நானும் தொண்டியில் பஸ்விட்டு இறங்கி அடுத்துள்ள கடையில் சென்று விசாரித்தேன்.கடைக்காரருக்கு ஆரம்பத்தில் யாரென்று புரியவில்லை.பின்னர் நான் பிஜேவை பற்றி சொன்னபோது "ஓ கிறுக்கனுடைய வீடா?அப்படி தெளிவாக சொல்லுங்கள் என்று எனக்கு வழி காண்பித்தார்.நான் அவருடைய வீட்டை கண்டுபிடித்து விட்டேன்.சிறிய குடிசை வீடு.வாசலில் கதவிற்கு பதிலாக துணியை மறைப்பாக தொங்க விட்டிருந்தனர்.வாசலில் அவருடைய தந்தை என்னை கண்டதும் என்னவிஷயம் என்று வினவினார்.

 நான் வந்த விஷயத்தை சொன்னதும் "ஏனப்பா அவன் உயிரோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?டைபாய்டு ஜுரம் வந்து சாககிடக்கிறான் என்புள்ளை.தயவு செய்து அவனை எங்கேயும் கூப்பிடாதீர்கள்"என்று கோபப்பட்டார்.

இதை கேட்டு ரூமில் படுத்து கிடந்த பிஜே யாரு அத்தா அது"அவரை உள்ளே வரசொல்லுங்கள் என்று சொன்னதும் நான் உள்ளே சென்றேன் ஒரு சிறிய அறையில் அவர் சோர்வாக படுத்து கிடந்தார்.அவரை பார்த்ததும் சலாம் சொல்லிவிட்டு நான் வந்த விஷயத்தை சொன்னேன்.ஆனால் தற்போது உள்ள நிலைமையில் தங்களால் வரமுடியாதல்லவா?என்று கூறி வருத்தப்பட்டேன்,அதற்க்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.நான் கண்டிப்பாக வருவேன் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னோடு மார்க்கப்பணிகள் முடிந்துவிட போவதில்லை.என்னை விட திறமையான ஆலிம்கள் நிறையப்பேர் உள்ளனர் என்றார்.

சரி என்று டாக்ட்டரை பார்க்க இருவரும் கிளம்பினோம்.டாக்டர் பரிசோதித்து விட்டு 104 டிகிரி விஷ காய்ச்சல் உள்ளது.அதனால் பயணம் செய்வது நல்லது இல்லை என்று அறிவுறுத்தினார்.ஆனால் பிஜேவோ நிச்சயம் போகவேண்டும் ஏதாவது செய்யுங்கள் என்று டாக்டரிடம் சொன்னார்.டாக்டர், அதற்க்கு மேல் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு ஒரு ஊசி போட்டு விட்டு மாத்திரை கொடுத்து 3 மணிநேரம் நன்றாக தூங்கிவிட்டு பயணம் செய்யுங்கள் என்றார்.நாங்கள் வீட்டுக்கு வந்ததும் பிஜேவின் தாய் எங்களுக்கு டீயும் பண்ணும் சாப்பிடதந்தார்கள். சாப்பாடு முடிந்ததும் பிஜே என்னிடம் "பாய் நீங்களும் சோர்வாக இருப்பீர்கள்.என்னுடைய அருகில் படுத்து கொள்ளுங்கள்" என்றார்.

இருவரும் உறங்கிவிட்டு லுஹருடைய பாங்கு சத்தம் கேட்டு எழுந்தோம்.பிஜே எழுந்ததும் மலர்ச்சியுடன் காணப்பட்டார்.காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்.லுஹர் தொழுது விட்டு புறப்பட தயாரானோம்.தொண்டி_எழும்பூர் பஸ்ஸில் ஏறினோம்.டிக்கெட் எடுக்க நான் பணம் எடுத்த போது அவர் "பாய் நான் எடுக்கிறேன் என்றார்"அதற்க்கு நான் இது என்னுடைய பணம் இல்லை.ஜமாஅத் பணம்.நம்முடைய செலவிற்கு தந்தது என்றேன்.அதற்க்கு அவர் அப்படியானால் நீங்கள் உங்கள் டிக்கெட் எடுத்துகொள்ளுங்கள் நான் என்னுடையதை எடுத்துகொள்கிறேன்"என்றார்.

நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்க்க வில்லை.பின்னர் மறக்க விஷயங்களை பற்றி பேசி கொண்டு எழும்பூரை அடைந்தோம்.அன்றய பூந்தமல்லி சொற்ப்போழிவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பிஜேவின் உரையும் மிக சிறப்பாக அமைந்தது. அன்றிலிர்ந்து சுமார் 30 வருடமாக நானும் பிஜேவும் நல்ல நண்பர்களாக உள்ளோம்.பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.முடிவுகள் எடுப்பதில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று தன் நண்பனை பற்றி பெருமையாக என்னிடம் சொன்னார்.


கேட்டு கொண்டிருந்த எனக்கு பிஜே மீது உள்ள மரியாதை கூடியது என்றே சொல்லலாம்.இதன் மூலம் இஸ்லாமிய சகோததர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒருவர் மீது அவதூறு சொல்லும் முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்.காரணம் நாம் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்."இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம்மீது என்றென்றும் உண்டாவட்டுமாக.....!!!!!

நன்றி அதிரை பாரூக் 

 http://peacetrain1.blogspot.com/2012/05/blog-post_08.html



Thursday, August 20, 2015

ஹஜ் பயணத்தில் ‘செல்பி'

 ஹஜ் பயணத்தின் போது இஸ்லா மியர்கள் புனிதமாகக் கருதும் பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பது பரவலான ஆதரவையும், அதே அளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.

மெக்காவிலுள்ள காபாவைச் சுற்றியும், அங்கு நடைபெறும் பல்வேறு மத சம்பிரதாய நிகழ்வுகளையும் தங்களுடன் சேர்த்து ‘செல்பி’ (தங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்) எடுத்து அதனை சமூக வலைத் தளங்களில் ஏராளமான ஹஜ் பயணிகள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஹஜ் பயண செல்பிகள் பெரும் பிரபல்யம் அடைந்துள்ளன.

24 வயதான அலி இது தொடர் பாகக் கூறும்போது, “இது எனது முதல் புனித யாத்திரை. இப்பகுதியில் என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித் துள்ளார். அவர், சாத்தான் மீது கல்லெறியும் சுவர் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

குவைத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “நான் எங்கு சென்றாலும், புகைப்படம் எடுப்பேன். தற்போது அனைவரிடமும் சிறிய கேமராக்கள் உள்ளன. இவை முழு காட்சியையும் பதிவு செய்கின்றன” என்றார்.

விமர்சனம்
ஹஜ் பயண செல்பிகளை கடுமையாக விமர்சனம் செய்து, பலரும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். நான் 90-ம் ஆண்டுகளின் மத்தி யில் உம்ரா சென்ற போது, கேமரா வைப் பார்த்த எந் தந்தை, ‘விலக் கப்பட்டது’ எனக் கூச்சலிட்டார். தற்போது, ஹஜ் செல்பிகள் பிரபல்யமாகியுள்ளது. என்ன உலகம் இது! என ஒருவர் பதிவிட் டுள்ளார்.

காவா என்ற பெயரில் ட்விட்டரில் ஒருவர் “இது அல்லாவுடன் தொடர்பு கொள்ளும் நேரம். எனது ஆன்மாவைச் சுத்திகரிக்கும் நேரம். ஹஜ் செல்பி-க்களை எடுக்கக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆதரவு
அதே சமயம் செல்பிகளுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர். ஹஜ் பயணத்தின் போது, புகைப்படங்களுக்கு அனுமதியிருக்கும் நிலையில், செல்பி-களை மட்டும் ஏன் எடுக்கக்கூடாது? எனச் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பேராசிரியர் கருத்து
இதுதொடர்பாக, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த ஷாரியா சட்ட பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “புகைப்படங்கள் தனிப்பட்ட நினைவுப் பொக்கிஷங்களுக்காக எடுக்கப்பட்டால் அதனால் தவறில்லை. ஆனால், பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஹஜ் சம்பிரதாயப் பகுதிகளில் எடுக்கப்பட்டால் அது தடை செய்யப்பட வேண்டும். செல்பி-களைத் தவிர்ப்பது முஸ்லிம்களுக்கு நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/

இரவில் ஒலித்த அழுகுரல்

வழிப்போக்கர்களைச் சுமந்துகொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்கு வந்தது. அந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள். இதனை ஜனாதிபதி உமர் கண்டார். வழிப்போக்கர்களான அந்தப் பயணிகளுக்கு உதவ விரும்பினார். தமது நண்பரான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபுடன் சேர்ந்து இரவு முழுவதும் அந்தக் குழுவினருக்குக் காவலராய் நின்றார். 

பின்னிரவு நேரத் தொழுகையான ‘தஹஜ்ஜுத்’-ஐ இருவருமாய் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. 

ஜனாதிபதி உமர் கூட்டத்தினரை நெருங்கி குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் அதே இடத்திலிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. 

ஜனாதிபதி உமர் குழந்தையின் தாயிடம் விரைந்து சென்றார். “அம்மா! இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழாமல் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்றார். 

கொஞ்சம் நேரம்கூட ஆகியிராது. மீண்டும் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
ஜனாதிபதி குழந்தையின் தாயிடம் சென்று குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார். இப்படி மூன்று முறை நடந்தது. 

கடைசியாக, குழந்தை அழும் குரல் கேட்டு தாயாரிடம் சென்ற ஜனாதிபதி உமர், “அம்மா! நீங்கள் இரக்கமுள்ள ஒரு தாயாக ஏன் நடந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இந்தக் குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!” என்றார்.
தன்னிடம் பேசிக்கொண்டிருப்பது ஜனாதிபதி என்று தெரியாமல் அந்தத் தாய் சொன்னாள்: 

“இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதாக! இரவு பல முறை நீங்கள் தேவையில்லாமல் எனக்கு அறிவுரை என்ற பெயரில் வந்து தொந்தரவு செய்துவிட்டீர்கள். இந்தக் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மறக்கடிக்க முயன்றுவருகிறேன். இந்தக் குழந்தையும் தாய்ப்பால் குடிப்பதை விட மாட்டேன் என்கிறது! நான் என்ன செய்ய?” என்று சலித்துக் கொண்டாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜனாதிபதி உமர், “அம்மா, குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால்குடி மறக்கடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?” என்று கேட்டார். 

“காரணமில்லாமல் செய்ய நான் கல்நெஞ்சம் கொண்டவளா? எங்கள் ஜனாதிபதி உமர் அவர்கள் பால்குடி நிறுத்திய குழந்தைகளுக்குத்தான் பைத்துல்மாலிலிருந்து (அரசு பொது நிதியகம்) நிதி உதவி செய்கிறார்கள்!”
“சரி.. இந்த குழந்தைக்கு வயதென்ன?” 

“குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகின்றன!” 

“குழந்தையைப் பால்குடி மறக்கடிக்க அவசரம் காட்ட வேண்டாமம்மா!” என்று சொல்லிவிட்டு ஜனாதிபதி உமர் அங்கிருந்து சென்றார். 

அதிகாலைத் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி உமருக்கு இரவில் நடந்த சம்பவம் நினைவில் வர, தொழுகையின் நடுவிலேயே அழ ஆரம்பித்தார். மேற்கொண்டு திருக்குர்ஆன் வசனங்களை ஓத முடியாமல் நா தழுதழுத்தது. ஒருவழியாகத் தொழுகையை நடத்திவிட்டு முடிவில் சொன்னார்: 

“உமர் அழிந்தான்! அவன் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட்டான்!”
அத்தோடு நில்லாமல் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளுக்கும் உடனடி ஆணையைப் பிறப்பித்தார். 

“குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் பொருட்டு எந்தத் தாயும் குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால் குடியை நிறுத்தக் கூடாது! இனி, பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் அரசின் நிதி உதவி கட்டாயம் உண்டு!” 


 இஸ்லாம் வாழ்வியல்: இரவில் ஒலித்த அழுகுரல்
இக்வான் அமீர் 

 http://tamil.thehindu.com/society/spirituality/
 

Thursday, August 13, 2015

குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது 

  சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ. 5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கொண்ட கும்பலை மைசூரு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

இது தொடர்பாக மைசூரு மாநகர காவல் கண்காணிப்பாளர் அபினவ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கர்நாடகாவை சேர்ந்த ஒரு கும்பல் இஸ்லாமியர்கள் புனித நூலான குரானின் மிக பழமையான பதிப்பை, பல கோடிக்கு ரூபாய்க்கு விற்க முயற்சிக்கிறது. அந்த பழமையான குரான் குறித்து இணையதளத்தில் தகவல் வெளி யிட்டு, வெளிநாட்டுக்கு விற்கப்பட வாய்ப்பு இருக்கிறது என ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த வாரம் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் மைசூரு கே.ஆர்.நகர் போலீஸார் அந்த மோசடி கும்பலை அணுகினர். அப்போது, இந்தியாவில் மிகவும் பழமையான இந்த குரான் தங்கத் தாளில் எழுதப் பட்டது. இதன் விலை ரூ. 5 கோடி எனக்கூறி, ஒரு வீடியோவையும் அனுப்பினர். அந்த வீடியோவை ஆராய்ந்த போது, மோசடி கும்பலிடம் இருக்கும் குரான் விலை மதிப்பற்றது என தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பலிடம் பேசி தனியார் விடுதிக்கு வரவழைத்தனர்.

அப்போது குரானை விற்க முயன்ற 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது புராதன பொருளை சட்ட விரோத மாக விற்க முயன்றது, மோசடி செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம் என்றார்.

அந்த குரானை 93 வயதான வரலாற்றியல் ஆய்வாளரும், மங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பி. ஷேக் அலி ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர், `தி இந்து' விடம் கூறியதாவது:

''என்னுடைய இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் இத்தகைய அரிதான குரானை பார்த்ததில்லை. 604 பக்கங்கள் கொண்ட இந்த குரான் தங்க முலாம் பூசப்பட்ட தாளில், கறுப்பு மையால் அரபி மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.

ஒரு தேர்ந்த, அனுபவம் வாய்ந்த‌ எழுத்தர் 6 அல்லது 7 ஆண்டுகள் இதனை எழுதி இருக்கலாம். இந்த குரான் சாய்வு வடிவிலான எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் 30 பாராக்களும், சம அளவுடைய 114 சுராக்களும் இடம்பெற்றிருக்கின்றன''என்றார். 



 http://tamil.thehindu.com/india/400-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%825-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7537804.ece?homepage=true&relartwiz=true

இது தான் உண்மை !!!


 அடிமைகளாய் இருந்து உமய்யாக்களின் ஆட்சியின் போது, இஸ்லாத்தில் இணைந்த பின்  இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மம்லுக்குகள். இவர்கள் 9 ம் நூற்றாண்டிலிருந்தே பல ஆட்சியாளர்களின் ஆட்சியில் இராணுவத்தில் பெரும் பதவிகளை வகித்தார்கள். குறிப்பாக அரசியலிலும், இராணுவத்திலும் இவர்கள் எகிப்து, லீவண்ட், ஈராக், இந்தியா போன்ற பகுதிகளில் தலையெடுத்தார்கள். தற்போதைய மத்திய ஆப்கானிஸ்தானிலிருந்த கோர் என்ற பகுதியை கஸ்னவித் ஆட்சியாளர் கஸ்னி முஹம்மதுவிடமிருந்து அபு அலி இப்ன் முஹம்மது வெற்றி பெற்று சுன்னிப்பிரிவு இஸ்லாமாக ‘குரித் ஆட்சிவம்சம்’ என்று துவக்கினார்.,,,


 இனி

http://islamiyaatchivaralaru.blogspot.in/

Tuesday, August 11, 2015

About இஸ்லாமிய பெண்மணி blog?

முஸ்லிம் பெண்களுக்கான சிறந்த தமிழ் பிளாக்.இஸ்லாத்தின் கொள்கைகள்,விளக்கங்கள்,முஸ்லிம் பெண்களின் ஆக்கங்கள் இன்னும் பல் சுவை கதம்பமாக மிளிர்கிறது,நீங்களும் படியுங்கள்,பிறருக்கும் எத்தி வையுங்கள் .


http://www.islamiyapenmani.com/

Monday, August 10, 2015

ஆண்மையுள்ள ஆனந்த விகடன்

 
 
 தண்டனை யாகூபுக்கு மட்டும் தானா ?
 
 
12-08-2015 தற்போதைய ஆனந்த விகடன் இதழில் தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா? என்ற தலைப்பிட்ட ஆக்கம் உண்மையிலேயே பத்திரிகை தர்மத்தை காப்பாற்ற இன்னும் ஒரு சில பத்திரிகை இருக்கவே செய்கிறது என நமக்கு உணர்த்துகிறது.
 
 சரணடைந்த ஒருவருக்கு அரசு சொல்லும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை என்றால்


*9,000 கோடி அளவிற்கு இந்திய பொருளாதாரத்தை சீரழித்த , நூற்றுக்கணக்கான உயிர்பலியை ஏற்படுத்திய மும்பை கலவரத்தை நான்தான் தொடங்கி வைத்தேன் என தனது சாம்னா பத்திரிகையில் வெளிப்படையாக எழுதிய பால்தாக்கரே வுக்கு கடைசி வரை தண்டனை கொடுக்காமல் பாதுகாப்பு கொடுத்த இந்திய நீதி துறையை காரி துப்புகிறது


*2002 ஆம் ஆண்டு வரலாறு காணாத இஸலாமியர் படுகொலையை ஏற்படுத்திய குஜராத் கலவரத்தை தூண்டியவர் யார் ? அவர்களுக்கு என்ன தண்டனை ?
கேட்கிறது செவிடனாய் இருக்கும் இந்திய நீதித்துறையை.


*2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை பற்றி அகப்பட்டுக்கொண்ட அசினாமந்தா வின் அத்தனை ஆதாரப்பூர்வமான பதில்களுக்கு பிறகும் ஏன் இன்னும் மரண தண்டனை விதிக்கவில்லை பிரக்யா சிங் பெண் ? சாமியாருக்கு ....


நாக்கை புடுங்கும் அளவிற்கு கேட்கிறது இந்திய நீதி துறையை



நாட்டில் நடந்த பெரும்பான்மையான அனைத்து வன்முறை வெறியாட்டங்களுக்கும் காரணமான ஆர்.எஸ்.எஸ் , வி.எச்.பி , பக்ரஜ்தள் போன்ற அனைத்தையும் ஏன் தடை செய்யவில்லை என நியாயமான அனைத்து கேள்விகளுக்கும் பதிலில்லை இந்திய நீதி துறையில் ...



நன்றி ஆனந்த விகடன்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
 
 http://www.adiraixpress.in/2015/08/blog-post_35.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+adirai+%28%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%29#.VcjrubUqMrc

Sunday, August 9, 2015

காக்கா வீட்டு பேரன்

சமீப காலங்களில் அண்ணலெம் பெருமானார் முஹம்மத் நபி ஸல் அவர்களின் தோழர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.உண்மையில் இது மிக மெச்சப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

முதலில் சஹாபாக்கள் என்போர் யார்? அவர்களின் தியாகங்கள் என்ன?போன்ற விஷயங்களை ,அவர்களின் உன்னதமான தியாகமான வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் இன்ஷா அல்லாஹ் படிக்க வேண்டும்,இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்க வாய்ப்புண்டு.


நம் குழந்தைகளுக்கு சினிமா நடிகர்,நடிகைகளின் பெயரை வைத்து,அவர்களை,அந்தக் கூத்தாடிகளை நம் குழந்தைகளுக்கும்,நம் சமுதாயத்துக்கும் அறிமுகப்படுத்தி,சேவை செய்யும் சில தாய் தந்தையர் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்கள் திருந்தி,அப்பெயர்களை மாற்றி,தத்தம் குழந்தைகளுக்கு சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் போன்றோர்களின் பெயர்களை  வைக்க வேண்டும்,தங்கள் குழந்தைகள் கூத்தாடிகளின் பெயர்களை தாங்கிக் கொண்டு திரியாமல்,அந்த அநாகரிக செயல்களுக்கு விளம்பரம் தேடித் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.இல்லையெனில்,சமுதாயத்தின் ஒழுங்கீனத்துக்கு அவர்கள் மறைமுக வேலை பார்க்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் பெயரை வைத்தால்,- அந்தக் குழந்தையின் பெயரை சொன்னாலே,அது அந்த உன்னத சஹாபியின் பெயர் நிழலாடி,அவர்களின் வரலாறு நினைக்க தோன்றும்,அல்லது அன்னவர்களின் வரலாற்றை படிக்கத் தோன்றும்.

என் காக்காஅவர்களுக்கு மகள் வழி பேரன் பிறந்திருக்கிறான்.மு ஆத் என பெயர் வைத்திருக்கிறார்கள்.அந்தப் பேரனை பார்க்கும் போதும்,கொஞ்சும் போதும் ,இயற்கையாகவே ரலி என்று சேர்த்து சொல்லவே மனம் நாடுகிறது,அத்துடன் அந்த சஹாபியின் வரலாறு நெஞ்சம் நனைக்கிறது,இன்னும் அவர்களின் வரலாறு படிக்கத் தோன்றுகிறது.இதன் மூலம்,அந்த உன்னத சஹாபியின் பெயர் மூலம்,அவர்களின் தியாகம் இன்னும் பரவ வழி ஏற்படுகிறது.இது கூட ஒரு சைகாலஜி போன்ற ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன்.



ஒரு நடிகனை,நடிகையை ,நம் பிள்ளைகளுக்கு பெயர் இட்டு,அவர்களின் கேவலமான வாழ்கையை விளம்பரப்படுதுவதன் மூலம்,அசிங்கமான செயல்கள் எல்லாம்,அங்கீகாரம் அடைந்து விடுகின்றன.இது சமுதாயத்தில் மறைமுக ஆபத்தை விளைவிக்கும்.

ஆனால்,இப்படி சஹாபாப் பெருமக்கள்,இமாம்களின் பெயர்கள் மூலம் ,அவர்களின் தியாகம்,ஒழுக்கம் நினைவு கூறப் பட்டு,சமுதாயம் சீர் படுகிறது.
எனவே,இது விஷயத்தில் நாம் கவனம் செலுத்தி,சஹாபாக்களின் மாண்புதனை இன்னும் உலகம் அறிய செய்வோம்,இன்ஷா அல்லாஹ்.


Saturday, August 8, 2015

அமெரிக்க அதிரை கூட்டமைப்பும் ,அதன் முக்கியத்துவமும்...

சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை அதாவது ஆகஸ்ட் இரண்டாம் தேதி,அமெரிக்க வாழ் அதிரைக் கூட்டமைப்பின் ஒன்று கூடல் ஒன்று கலிபோர்னியா மாநிலத்தின் வல்லெஹோ என்ற ஊரின் ஒரு பூங்காவில் நடந்தேறியது.

பொதுவான,ஒரு நிகழ்வாக அது நடந்து இருப்பின்,அதைப் பற்றிய செய்திகளை பரிமாறும் எண்ணம் வந்து இருக்காது.ஆனால்,அங்கு வந்து கூடி இருந்த மக்கள் அனைவரும் அதிரை மக்களின் மீதான ஒரு கரிசன உணர்வுடன் கூடிப் பேசி இருந்ததைக் கண்டவுடன்,பகிரவேண்டும் என்ற நல எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை தானே.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு வாழும் அதிரை முஸ்லிம் மக்கள் அனைவரும் எவ்வித தெரு வேறுபாடும் இல்லாமல்,எந்த சங்கத்துக்கும் கொடி பிடிக்காமல்,ஒன்று பட்ட ஒரே அமைப்பாக இருக்கிறார்கள்.எந்த ஒரு தெருவுக்கும் இங்கு அமைப்புக்கள் இல்லை.அனைவரும் அமெரிக்கன் அதிரை போரம் என்ற அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல் பட்டுக் கொண்டுள்ளனர்.இது வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒரு அறிய நிகழ்வாகும்.

வளைகுடா நாடுகளில் உள்ள எந்த நாட்டையும் எடுத்துப் பார்ப்போம் என்றால்,அங்கெல்லாம்,முஹல்லாகள் முஹல்லாக்களாக பிளவு பட்டு,தெருவுக்கு ஒரு சங்கமாக பிரிந்து கிடக்கிறார்கள்.ஆஸ்திரேலிய,பிரிட்டன் போன்ற நாடுகளின் கதியும் இதுதான்.

குறிப்பிட்ட இந்த தெரு வாசிகளின் கூட்டம் நடை பெற உள்ளதால்,குறிப்பிட்ட அந்த தெரு வாசிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் வருகின்றன.

ஆனால்,அமெரிக்காவின் நிலையே வேறு,இங்கு அதிரைவாசிகளே கலந்து கொள்ளுங்கள் என்றுதான் விளம்பரங்கள் வரும்.

அதேயே,கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்ட சவூதி ஐடாவின் முன்னாள் தலைவர்,ஆபிதீன் காக்கா அவர்கள்,இதை ஒரு யுனிக் என்று குறிப்பிட்டு பாராட்டினார்கள்.

இன்ஷா அல்லாஹ்,இது இனியும் தொடர வேண்டும் என்பதே நம் அவாவும்,துவாவும். 

Friday, August 7, 2015

மரைக்காயர் பிரியாணி,அட-இது நம்ம பிரியாணி



NEW STORE OPEN IN CHENNAI

 சென்னை வாழ் அதிரையர் சுஹைப் இன்று அமைந்தகரையில் PERFUME GALLERY புதிய தொழில் நிறுவனத்தை இன்று மாலை தொடங்கியுள்ளார்

.இந்நிறுவனத்தில் அணைத்து வகையான வெளிநாட்டு வாசனை திரவியங்கள் ,சாக்லேட் வகைகள் ,பரிசு  பொருட்கள் ,கடிகாரங்கள் விற்கப்படுகிறது .

PLEASE SUPPORT


Monday, August 3, 2015

குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும், யூத அறிஞர்


“அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும்” - இது இஸ்ரேல் நாட்டில் புகழ்பெற்ற  ஆர்த்தோடாக்ஸ் மதருகுருவான ( Rabbi Menachem Froman) ரப்பி மெனாகம் ஃபுரோமனின் அறிவுரை. அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை பார்த்துதான் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். இஸ்லாத்தின் ஆதார நூல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால்தான் அந்தத் துறை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை வெளியீட்டு வருகிறது என்பதே ஃபுரோமனின் கருத்து.

இதற்க்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அந்த அதிகாரிகள் குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுமுறை எடுத்து குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும். இஸ்லாம் மாபெரும் ஆன்மீகக் கடல் என்பதையும் அதிலிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதையும் அப்போது அவர்கள் விளங்கிக் கொள்வார்.

மேற்கத்தியர்களும் யூதர்களும் முஸ்லிம்களிடம் அவமரியாதையுடன் நடந்து கொள்வதே பிரச்சனைக்குக் காரணம். ஆணவத்தின் மொழியில் அவர்கள் பேசுகின்றனர். அவர்கள் அமைதியை விரும்பினால் முஸ்லிம்களை நெருங்கிச் சென்று அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஃபுரோமன்.

ரஷ்ய வார இதழான ‘எக்ஸ்பெர்ட்டு’க்கு அளித்த நேர்காணலில் 63 வயதான ஃபுரோமன் தனது கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டுள்ளார். இவர் பலமுறை முன்பு யாசிர் அரஃபாத்தை சந்தித்து அமைதித் திட்டத்திற்காக முயன்றவர் என்பது குறிப்பிடதக்கது. அரசியல் தீர்வை விட  ஆன்மீகத் தீர்வைக் குறித்தே அவர் வலியுறுத்தி வந்தார். ஜெருசலம் யாருக்கு என்பதுதான் மோதலுக்கான முக்கியக் காரணம் என்பதால் அந்தப் புனித நகரத்தை யூத,கிறிஸ்தவ, இஸ்லாமியர் அனைவருக்கும் சொந்தமாக்கி உலகத்தின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது இவரது பரிந்துரை.

http://valaiyukam.blogspot.com/2015/08/blog-post_3.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!