Tuesday, September 29, 2015

தந்திரமாக நடக்கும் கொலைகள்!அதிர்ச்சி தகவல்!!

Mohamed Anas


பண்டைய அரபு தேசத்தில் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அந்த மண்ணில் வந்தவுடன் அந்த பழக்கத்தை கடுமையாக தடை செய்தது. நபிகள் நாயகம் அவர்கள் ''யார் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று அழகிய முறையில் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, அவர்களுடன் நல்ல முறையில் நடக்கிறாரோ அவருக்கு இறைவன் சுவர்கத்தை பரிசாக கொடுக்கிறான்'' என்ற நற்செய்தியை அந்த மக்களுக்கு கூறினார்கள். மேலும் திருக்குரான் வசனமோ ''மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று'' போன்ற எச்சரிக்கையும் அந்த மக்களுக்கு விடுக்கப்பட்டது. இது அந்த சமூகத்தை முழுவதுமாக மாற்றியது. சமூகம் மாற வேண்டும். எண்ணங்கள் மாற வேண்டும். வரதட்சணை ஒழிய வேண்டும். அப்பொழுதே இந்த அவலங்கள் முற்று பெரும்.

----------------------------------------------------------------------

உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊற்றி தளிரிலேயே பொசுக்கும் பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இந்த சமூக அவலத்தை தடுக்க அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் நிலைமை இன்னும் மாறவில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது. அங்கே, சிசுக்கொலைகள் குறைந்தாலும் நவீன வடிவத்தில் கருக்கொலைகள் அதிகரித்துவிட்டன என்பதே களம் நமக்குச் சொல்லும் தகவல். 

தாயே தன் மகளுக்கு கள்ளிப்பால் புகட்டி மண்ணுக்குள் புதைப்பது உசிலம்பட்டி பகுதிக்கு புதிதல்ல. ‘இதுவும் பொட்டப் புள்ளயா.. கழுதைய போட்டுத் தள்ளிரு.. வச்சிருந்தா வகை பண்ண முடியாது’ - சர்வ சாதாரணமாய் இப்படிச் சொல்லி, கருப்பையின் ஈரம் காய்வதற்குள் பெண் சிசுக்களை கல்லறைக்கு அனுப்பும் அவலத்தை 1984-ல் தான் வெளி உலகம் அறிந்தது. இதற்குப் பிறகுதான், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இதைவிட அதிகமாக பெண் சிசுக்கள் கொல்லப்படும் பகீர் தகவலும் கசிந்தது. 

சிசுக்கொலையின் அடிநாதம் 
 
முன்பெல்லாம் மதுரை, தேனி மாவட்டங் களில் ஆண்கள்தான் பரிசப் பணம் கொடுத்து பெண்களை மணம் முடித்தார்கள். பெண்ணுக்கு சீர்வரிசையாக ஆடு - மாடுகளை மட்டுமே கொடுத்தனுப்பினார்கள். பசுமைப் புரட்சியின் வரவால் விவசாயம் செழித்தபோது நகை, பணம் என வரதட்சணை கொடுத்து பெண்களைக் கட்டிக் கொடுக்கும் வழக்கமாக மாறியது. 

இது வானம் பார்த்த பூமி. பக்கத்திலேயே வைகை அணை இருந்தாலும், உசிலையின் ஒரு பகுதியை மட்டும் வளப்படுத்திவிட்டு இன்னொரு பகுதிக்கு வஞ்சகம் செய்கிறது வைகை நதி. வளமான பகுதியில் இருப்பவர்கள், பெண்களுக்கு அதிக நகைகளை போட்டு கட்டிக் கொடுத்தார்கள். அவர்களுக்குச் சரிநிகராக வறண்ட பூமிக்காரர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை. கடனை வாங்கி சீர் செய்து விட்டு கடனாளி ஆனார்கள். வாகாக சீர்வரிசை கொண்டு வராத பெண்கள், புகுந்த வீட்டில் நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். 

கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நிற்கும் மகளுக்கு வழி சொல்ல வகை தெரியாத பெற்றோர், ‘இம்பூட்டுக் கஷ்டப்படுறதுக்கு பொறந்த வீட்டுக்குள்ளயே இந்தப் புள்ளய கள்ளிப்பால ஊத்திக் கொன்னுருக்கலாம்’ என்று அமில வார்த்தைகளை அள்ளி வீசுவது வழக்கமானது. பெண் சிசுக் கொலையின் அடிநாதம் இதுதான். 

ஆணுக்கு முக்கியத்துவம் ஏன்? 
 
எப்படியும் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பெற்றவர்கள், கள்ளிப்பாலோ எருக்கம் பாலோ, நெல் உமியோ கொடுத்து ஈவிரக்கமின்றி கொன்று புதைத்தார்கள். 

‘மூணு பொட்டப் புள்ளையல கொன்டோம்னா நாலாவதா ஆம்பளப் புள்ளதான்’ - இப்படிக் கிளப்பி விடப்பட்ட மூட நம்பிக்கைகளும் பெண் சிசுக்களுக்கு எமவேதமாக அமைந்து போனது. இப்படித்தான் பெண் சிசுக் காவுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போனது உசிலம்பட்டி. என்னதான் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இருந்தாலும் இன்னும் அங்கே சிசுக்கொலைகள் தொடர்கின்றன. அதைவிட அதிகமாக கருக்கொலைகள் பெருகிவிட்டன. 

“ஆம்பளப் புள்ளை இல்லைன்னா ’அரசத்த வளே’ன்னு வைவாக. எங்க அம்மாச்சிக்கு மூணு பொட்டப் புள்ள, எங்கம்மாவுக்கு ரெண்டு, எனக்கும் ரெண்டாவது பொட்டப் புள்ளயா பொறந்துடக்கூடாதுன்னு எங்கம்மா என்னைய திருமங்கலத்துல இருக்குற ஸ்கேன் சென்டருக்கு கூட்டிப் போச்சு. கோயில் விசேஷத்துல (கடா) குட்டி பிடிக்க, செத்தாக்க கோடித்துணி கொண்டாந்து போட, வாணம் போட்டு, உருமி கொட்டி மையக்கரைக்கித் தூக்கிவிட இதுக்கெல்லாம் ஆம்பளப் புள்ளதானே வேணும்கிது சனம்’’ என்று ஆண் வாரிசுக்கு வக்காலத்து வாங்குகிறார் கொக்குடையான்பட்டி பிரியா. 

தந்திரமாய் சாகடிப்பு 
 
இதே ஊரைச் சேர்ந்த சமூக சேவகி மீனாட்சி, “ஏழு வருசத்துக்கு முந்தி வடகாட்டுப்பட்டியில சலவை தொழிலாளி ஒருத்தரு மூணாவதும் பொம்பளப் புள் ளயா பொறந்துருச்சுன்னு சொல்லி அந்தப் புள்ளைய வீட்டுக்குப் பக்கத்துல இருந்த குழியில உசுரோட தூக்கி அடிச்சு மண்ணைப் போட்டு மூடுனாரு. கதறக் கதற அந்தச் சிசுவை மண்ணுக்குள்ள போட்டு மூடுன கொடுமையை கண்ணால பாத்தவ நான். உசிலம்பட்டி பகுதியில இப்பையும் பொம்பள புள்ளைகள கொன்டுக் கிட்டுத்தான் இருக்காக. ஆனா, ரொம்ப தந்திரமா பண்றாக. இந்தப் பகுதியில இருக்கவங்க நிறையப் பேரு ஆந்திரா, கர்நாடகான்னு தொழில் பாக்குறாக. 

நெறமாச கர்ப்பஸ்திரிகள அங்க கூட்டிட்டுப் போயிடுறாங்க. ஆணா பொறந்தா அங்கருந்து உடனே தூக்கிட்டு வந்துருவாங்க. பொட்டப் புள்ளைனா நாலாம் பேருக்கு தெரியாம கொன்டு பொதைச்சிட்டு ஒரு மாசம் கழிச்சு, எதுவுமே நடக்காதது மாதிரி ஊருக்கு திரும்பிருவாக. ’என்னடி ஆச்சு?’ன்னு கேட்டா, ’’கொடி சுத்திப் பொறந்துச்சு. பெரிய உசுர காப்பாத்துறதே பெரும்பாடா போச்சுல்ல, புள்ளைக்கி ‘ஆர்ட்’டுல (ஹார்ட்) ஓட்டையாம், குழந்தைக்கு வளர்ச்சி இல்லை’ அப்படி இப்படின்னு ஏதாச்சும் காரணத்தச் சொல்லுவாக. இப்பெல்லாம் காசுக்காக டாக்டருங்களே பொம்பளப் புள்ளைய கொல்லத் தயாரா இருக்காங்க” என்கிறார்.
பெண் குழந்தைகளால் என்ன பிரச்சினை? 
 
“அப்பெல்லாம் அஞ்சு பொட்டப் புள்ளைகளக் கூட பெத்து வளத்துக் கட்டிக் குடுத்தாங்க. ஆனா இப்ப, பொம்பளப் புள்ளைய பெத்தாலே புருஷங்காரன் சண்டை புடிக்கிறான். அந்தக் கொடுமைய தாங்க முடியாம புள்ளைக நாண்டுக்குதுக. சரி.. பொட்டப் புள்ளையா இருந்தாலும் பரவால்ல. ஆளாக்கிக் கட்டிக் குடுத்துருவோம்னு படிக்க வைச்சா, எடப் போக்குல சாதிவிட்டுச் சாதி எவனையாச்சும் இழுத்துட்டு ஓடிருதுக. இந்தக் கச்சடாவெல்லாம் வேண்டாமுன்டு தான் பொம்பளப் புள்ளைகன்டா கழிச்சுக் கட்டிடுறாங்க’’ சிசுக்கொலைக்கு இப்படி நியாயம் கற்பிக்கிறார் ஆனையூர் அங்கம்மாள். 

“ஆம்பளப் பய எப்புடியும் பொழைச்சுக் குவான். அவனுக்கு ஒரு கோவணத்தக் கட்டிக்கூட வெரட்டிரலாம். பொட்டப் புள்ளைகள அப்படி வெரட்ட முடியுமா சாமி? அதுகளுக்கு பொறந்ததுலேயிருந்து மையக்கரை வரைக்கும் சீர் செய்யணும். அந்தக் காலத்துல நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவ தான் அரிசிச் சோத்தப் பாப்போம். இந்த லட்சணத்துல புருசன் அடிக்கிறான்னு பொட்டப்புள்ள கண்ணக் கசக்கிட்டு வந்து நிக்கும். மூணுவாட்டி கூட தீத்து விட்டிருக்கோம். இதையெல்லாம் சகிச்சுக்க முடியாமத்தான் கள்ளிப்பாலை ஊத்துனாங்க’’ என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த கருத்தக்கண்ணன். 

“நாங்க தான் நெதானம் தெரியாம செஞ்சோம். இப்ப, காலம் பெரண்டுக்கிச்சுல்ல. ஊசி, மருந்து, மாத்தரைன்னு வந்துருச்சுப்பு. ஆணு பொண்ணுன்னு பாத்து கலைச் சுப்புடுறாங்கள்ல.. பொட்டப் புள்ளைகளப் பூரா கொன்னு போட்டுட்டு இப்ப பொண்ணுக கெடைக்காம வெளி வெளியா பொண்ணு தேடி கெளம்புறாங்கே.” கருக்கலைப்பின் அபாயகரமான தாக்கத்தை போகிற போக்கில் விதைக்கிறார் பி.முத்துப்பிள்ளை. 

“இப்பத்தான் ஏன் கொல்றே?’ன்னு வர்றாங்க. அந்தக் காலத்துல இந்த வெசாரணை எல்லாம் இல்லப்பு. பொட்டப்புள்ள பொறந்துருச்சா.. (தொடர்ந்து.. பெண் சிசுவைக் கொல்வதற்கு கையாளும் முறையை அவர் சொன்ன விதத்தை விலாவாரியாகச் சொல்ல முடி யாது என்பதால் தவிர்க்கிறோம்) மூணே நாழிகையில எல்லாம் முடிஞ்சிரும். புள்ளைய பெத்தவ ரெண்டு மூணு நாளைக்கு அழுதி சிந்திக்கிட்டுக் கெடப்பா. அந்தப் புள்ள வளந்து பெருசாகி வாக்கப்பட்டுப் போற எடத்துல அடிப்பட்டு மிதிபட்டுச் சாகுறதுக்கு இது தேவலைன்னு அப்புறம் அவளே தேத்திக்குவா’’ இது ஆனையூர் காசம்மாளின் வாதம். 

“அன்னைக்கி கிலோ கணக்குல நகை போட்டு புள் ளைகள கட்டிக் குடுத்தாங்க. இப்ப வெலவாசி ஏறிப் போச்சு. இப்பப் போயி கனமா பொட்டப் புள்ளைகள பெத்துப் போட்டு என்ன செய்ய..? இருக்குற வீட்டுப் புள்ளைகள பகுமானமா கட்டிக் குடுக்குறாங்க இல்லாத வீட்டுப் புள்ளைக நின்டு போகுதே. அதனால தான் பொட்டப் புள்ளையே வேணாம்னு சொல்லுது சனம்’’ 

கொக்குடையான்பட்டி காமாயியும் மின்னல் கொடியும் இப்படிச் சொல்கிறார்கள். அதிர்ச்சி தரும் வார்த்தைகளை அனாசயமாக கூறுகின்றனர். சிசுக்கொலைக்கான காரணத்தை இன்னும் சிலர் வேறு கோணத்தில் கூறுகிறார்கள். 

 thanks

 http://tamil.thehindu.com/opinion/columns/

 4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.



6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
 
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
 




Monday, September 28, 2015

ஈரானிய ஷைத்தான்- பயங்கர சதி அம்பலம்

பதினாங்கு வருடங்களாக நிகழாத நிகழ்வு தீடீர் என ஏற்பட்ட உடன் மெக்காவில் நடந்த விபத்திற்கு சவுதி அரேபியா தான் காரணம் என்கிறார்கள். உண்மையில் சவுதியுடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவினாலும் மக்காவை சவுதியை தவிர வேறு எந்த நாட்டாலும் இவ்வளவு திறமையாக நிர்வகிக்க முடியாது என சவாலாகவே சொல்லலாம்.
முப்பது லட்சம் மக்கள் ஒன்றாக குழும் இடத்தை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, பதிமூன்றாயிரம் சிசிடி கேமராக்கள் ஒரு நொடியும் தாமதிக்காமல் இயங்கி கொண்டு இருக்கிறது.

லட்சக்கணக்கான ஊழியர்கள் ஒவ்வொரு வினாடியும் திறம்பட இயங்குகிறார்கள். பல்லாயிரக்கணக்கான காவலர்கள் செக்யூரிடிகள் சிறு அசம்பாவிதமோ சண்டையோ நிகழாமல் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் தவிர்க்க முடியா விபத்துகள் மொத்த நிர்வாகத்திறனையும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் தவறுகள் நிகழத்தான் செய்யும் இது தான் எதார்த்தம்.
ஆனால் மக்கா நெரிசல் நிகழ்வுக்கு தற்போதைய முக்கிய காரணம் ஈரானிய ஷியாக்கள் தான்.
 
இவர்கள் தான் எப்போதும் பிரச்சினை செய்ய கூடியவர்கள் 1987ல் போலீஸுடன் மோதி சண்டையிட்டு நாநூற்றுக்கும் அதிகமான மக்கள் மரணிக்க இவர்களே காரணமாக இருந்தார்கள்.

தற்போது நடந்த விபத்திற்கும் இவர்கள் தான் காரணம். தீடீர் என்று ஈரானியா ஹாஜிகள் சவுதி அரசை எதிர்த்து அங்கே போராட்டம் செய்யும் விதமாக குரல் எழுப்ப பெரியளவில் சலசலப்பு ஏற்ப்பட்டது.

மொராக்கோவை சேர்ந்த முஹம்மது அப்துல் சலாம் மற்றும் குவைத்தை சேர்ந்த கலீதல் ஹாசிமி என்பவர்கள் சொல்கிறார்கள் ஈரானிய ஷியாக்கள் தீடீர் என கூட்டத்தில் பிரச்சினை செய்யும் விதமா சவுதி அரசுக்கு எதிராக ஒன்று திரண்டு குரல் எழுப்பினார்கள், இதை தடுக்க வந்த காவலர்களிடம் தகராறில் ஈடுப்பட்டார்கள் என்றார்கள்.

கூட்டம் அதிகமாக இருக்கவே லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியதில் சிலர் கீழே விழ, கீழே விழுந்தவர்கள் மீது பின்னால் வந்தவர்கள் மேலே மிதிப்படும் நிலைக்கு ஆளாகியது.

காரணம் இவ்வாறு இருக்க சம்பந்தம் இல்லாமல் நிர்வாகம் சரி இல்லை என ஈரான் கொந்தளிப்பது தன் நாட்டை பிரேஜையின் தவறை மூடி மறைக்கத்தான். அதற்கு ஏற்றார் இங்கிருந்தும் சிலர் பிரச்சினை செய்கிறார்கள்.

ஈரானியர்களின் கேடுகெட்ட தனத்தால் நூற்றாக்கணக்கான உயிர்கள் போனதும் அல்லாமல் சவுதியை விமர்சிக்கிறார்கள்.
சவுதி எந்த வசதியும் செய்து கொடுக்காமல் மக்கள் நெரிசல் உண்டாக காரணமாக இருந்தால் விமர்சிப்பதில் தவறல்ல.

ஒவ்வொன்றிருக்கும் டைம் டேபிள் போட்டு செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பும் அவர்கள் விதிமுறைகளையும் சரியாக பின்பற்றினால் உயிர் சேதம் தவிர்க்கப்படும்.

அதே போல் பெருமைக்காக திரும்ப திரும்ப ஹஜ் செய்பவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
 
தேவையற்ற நெருக்கடியை தவிர்க்க முடிந்தளவு முயலுங்கள்.

thanks 
http://adiraipirai.in/?p=15205

Sunday, September 27, 2015

நதிக்கு அந்தப்பக்கம்

ஹல்லோ... அஸ் ஸலாமு அலைக்கும்....

எப்படி இருக்கீங்க.... என் பெயர் யஹ்யா. நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்....  புதுக்கோட்டை பக்கத்துல ஆழியூர் கிராமம்தான் எங்க ஊர். நானும் என் உம்மாவும் எங்க குட்டித்தம்பி ஹாரூனும்தான் என் உலகமே.  ஹாரூன் பத்தி சொல்லலையே நானு.... ஹாரூன், பாப்பாவா இருந்தப்ப முதல்ல எதிர்த்த வூட்டு மீரான் மாமா வீட்டுலதான் இருந்தான். மீரான் மாமாவோட ஒரே பையன். ஆனா மீரான் மாமாவும், மாமியும், ஒரு நா கடல்ல மீனு பிடிக்க போனவங்க திரும்பி வரவேயில்லை. ரெண்டு நா கழிச்சு, அவங்களை தண்ணிலருந்து மீட்டு வந்தாங்க. அதுதான் நான் அவங்களை கடைசியா பாத்தது. அதுக்கப்புறம் இருந்து ஹாரூனை உம்மா எங்க வூட்டுலயே வெச்சுகிட்டா.

அப்புறம்..... இந்த குப்பத்துல எல்லாருக்குமே எங்க உம்மாவை ரெம்ப பிடிக்கும். ஏன்னா மக்ரிபுக்கப்புறம் எல்லாரும் அந்த தெரு விளக்கு இருக்குல்ல... அந்த தெரு விளக்குக்கு கீழே உம்மா எல்லாக் குழந்தைகளையும் கூட்டி வச்சி, தினமும் ஒரு கதை சொல்லுவா. ஒவ்வொரு புள்ளைகிட்டயும் எதுனா கேள்வி பதில் கேட்டு, அதுக்கப்புறம் நல்ல விஷயங்களை வச்சு எல்லாரும் பழகிக்கற மாதிரி ஒரு கதை சொல்லுவா. எங்க எல்லாருக்கும் கதைன்னா ரொம்ப இஷ்டம்... உங்களுக்கும்தானே... அப்படி நேத்து நடந்ததை சொல்லவா??

நேத்து அப்படித்தான் பக்கத்து தெரு கனிகிட்ட உம்மா கேட்டா, ஏண்டா பொழுதன்னிக்கும் அழுதுட்டே இருந்தேன்னு சொல்லி. அதுக்கு கனி சொன்னான், நான் ரஹ்மத் லாத்தா பையன் கேட்டான்னு இருவது ரூவா கொடுத்தேன், கடனா... எங்கட உம்மா, யாரை சாட்சியா வச்சு கொடுத்தேன்னு கேட்டா, நான் அல்லாஹ்தான் சாட்சி சொன்னேன்.... அதுக்கு சவட்டிட்டான்னு சொல்லி ஒரே அழுகை. அப்புறம் எங்க உம்மா சொன்னா, அழாதே கனி.... இப்படித்தான் ரெண்டு பேரு முன்ன ஒரு காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே சாட்சியா வச்சி கடன் தந்து வாங்கினாங்க.... அந்தக் கடனை திருப்பி அடைக்க அல்லாஹ்வே போதுமானவனா இருந்தான்னு சொன்னா. ஒடனே ஹாரூன் குட்டி, உம்மா.... உம்மா... அந்தக் கதைய சொல்லு சொல்லுன்னு ஒரே பிடிவாதம். அம்மாவும் சொல்ல ஆரம்பிச்சா...


முன்ன ஒரு காலத்துல ’தர்யான்’னு ஒரு ஊரு, எகிப்துல நைல் நதி பக்கத்துல இருந்துச்சு. அங்க அப்துல்லாஹ், ஹபீப்ன்னு ரெண்டு பசங்க ரொம்ப சினேகிதம். எங்க போனாலும் ஒன்னா போவாங்க, ஒன்னா வருவாங்க, எப்பவும் ஒன்னாவே இருப்பாங்க... ஒரு நாள் அப்துல்லாஹ்வுக்கு நதிக்கு அந்தப்புறம் இருக்கற எடத்துல ஒரு வேலை கெடைச்சிச்சி. அப்போ அப்துல்லாஹ் வந்து சொன்னான்... ”ஹபீப்... எனக்கு நதிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலை கெடைச்சிருக்கு. நான் உடனே பயணம் போகனும்... ஆனா காசுதான் இல்லே... எனக்கு கொஞ்சம் காசு தர்றியா”ன்னு கேட்டான். ஹபீபும், அடடே நம்ம கூட்டாளிக்கு நல்ல வேலை அமைஞ்சா அது நல்லவிசயம்தானேன்னு முடிவு செஞ்சி பணம் எடுத்தாந்தான். பணம் கொடுக்கும் முன்னாடி ரெண்டு பேரும், ”யா றப்பே... உன்னை சாட்சியாக்கி, உன் முன்னாடிதான் இந்தப் பணத்தை ஹபீப் கொடுக்க நான் வாங்கிக்கிட்டேன். இன்ன தேதியில இந்தக் கடனை திருப்பித் தருவதுக்கு நீயே பொறுப்பு”ன்னு உறுதி செஞ்சுகிட்டாங்க.

ஆச்சு. அப்துல்லாஹ்வும் படகு ஏறி நதிக்கு அந்தப் பக்கம் பயணம் போயிட்டான். நாளும் வேகமா ஓடிடுச்சி. கடன் திருப்பித் தர வேண்டிய நாளும் வந்துடிச்சி. ஆனா அதே சமயம் பயங்கர சூறாவளிக்காத்தும், நதியோட போக்கு வேகமா இருந்ததாலும் ஒரு படகும், கப்பலும் நைல் நதியில போகலை. அப்துல்லாஹ்க்கு சங்கடமா போனுச்சு.... நாம நம்ம கூட்டாளிகிட்ட வாங்கின பணத்தை இன்ன தேதிக்குதானே தர்றோம்ன்னு சொன்னோம்... இப்போ என்ன செய்றதுன்னு அல்லாஹ்வே எனக்கு வழி காட்டுன்னு சஜ்தா செய்து, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதுக்குள்ள அந்தப் பணத்தை வச்சி நல்லா அடைச்சி, அல்லாஹ்வே இதை ஹபீப்ட்ட நீதான் சேர்க்கனும். இதுக்கு நீயே பொறுப்புன்னு சொல்லி பணமிருக்கும் அந்த மரக்கட்டையை கடல்ல வீசி எறிஞ்சுட்டான்.

அதே நேரம் அங்கே ஹபீபும் கரைப்பக்கமா நின்னு தன்னோட சகாவை எதிர்பார்த்துகிட்டே இருந்தான். மோசமான வானிலையையும்  ஆளே இல்லாம இருப்பதையும் கவனிச்சு, திரும்பிப் போக நினைச்சவன் காலில் எதோ தட்டுச்சு. என்னானு பார்த்தால், மரக்கட்டை. அதுல எதோ அடைச்சிருக்கேன்னு எடுத்து பார்த்தா, அப்துல்லாஹ் அனுப்பி வச்ச பணமுடி. அல்லாஹ்வை நினைச்சி, ஷுக்ர் அதா செஞ்சிட்டு, ரொம்ப சந்தோஷமா தன் வீட்டுக்கு திரும்பிட்டான்.

இந்தக் கதைய சொல்லி முடிச்சதும் எங்க உம்மா, கனியைக் கூப்பிட்டு சொன்னா. ”நீயும், உன் சினேகிதனும் அல்லாஹவை மெய்யாலுமே நம்பி, அவனுக்கு பயந்து, அவன் முன்னாடி இந்த உறுதி எடுத்துகிட்டோம்னு நினைப்புல சரியா இருந்தா, அல்லாஹ் உங்க கடனை திருப்பித் தர பொறுப்பெடுத்துப்பான் கனி... கவலைப்படாதீங்க, பொறூமையா இருங்க.ஏன்னா அல்லாஹ் பொறுமையாளர்களுடன் தான் இருக்கிறான்”னு சொல்லி அனுப்பினா.

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
2:153
 
thanks 
 http://mydeartamilnadu.blogspot.com/2015/09/blog-post_27.html

Thursday, September 10, 2015

எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை!!!

அஸ்ஸலாமு அலைக்கும்,

இச்சட்டத்தின் படி, ஒருவர் தகவலை பெற அவர் இந்தியராக இருத்தல் மட்டும் போதுமானது (எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை). மொபைல் நம்பர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் தகவல் கேட்பவரின் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் அவசியம். 

தொடர்ந்து படிக்க: http://manithaabimaani.blogspot.com/2015/09/blog-post_10.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!